NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி
    உலகம்

    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி

    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி
    எழுதியவர் Sindhuja SM
    Mar 30, 2023, 12:50 pm 1 நிமிட வாசிப்பு
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி
    ராகுல் காந்தி விவகாரம் குறித்து பேசும் முதல் ஐரோப்பிய நாடு ஜெர்மனி ஆகும்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது குறித்து ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. புதன்கிழமை(மார் 29) ஒரு அறிக்கையில், ஜெர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "நீதித்துறை சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்" ராகுல் காந்தியின் வழக்கில் பின்பற்றப்படுவதை ஜெர்மனி எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார். ராகுல் காந்தி விவகாரம் குறித்து பேசும் முதல் ஐரோப்பிய நாடு ஜெர்மனி ஆகும். ராகுல் காந்திக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் அவர் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஆகிய விஷயங்களை ஜெர்மன் அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது என்று ஜெர்மன் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.

    வெளிநாடுகளின் தலையீட்டை இந்தியா பொறுத்துக் கொள்ளாது: கிரண் ரிஜிஜு

    இருப்பினும், ராகுல் காந்தி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து "மேல்முறையீடு செய்யலாம்" என்று ஜெர்மனி வலியுறுத்தி உள்ளது. மேலும், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ஏதேனும் அடிப்படை காரணம் உள்ளதா என்பதைப் ஆராய வேண்டும் என்றும் ஜெர்மனி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் நடைபெற்ற வழக்கமான செய்தியாளர் சந்திப்பின் போது இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. ஜெர்மனியின் கருத்துக்கு பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்று கூறினார். "வெளிநாட்டு தலையீட்டால் இந்திய நீதித்துறை பாதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 'வெளிநாட்டு தலையீட்டை' இனியும் இந்தியா பொறுத்துக்கொள்ளாது, ஏனெனில் இப்போது நமது பிரதமராக இருப்பது நரேந்திர மோடி ஜி." என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்
    இந்தியா
    உலக செய்திகள்

    உலகம்

    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா இந்தியா
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது இந்தியா
    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்
    சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது அமெரிக்கா

    இந்தியா

    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்
    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் புளூ டிக் வேண்டுமா? வெளியானது கட்டண விபரம் மெட்டா
    சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று துவங்கியது சென்னை

    உலக செய்திகள்

    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்
    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023