NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / டச்சு பிரதமர் ராஜினாமா: நெதர்லாந்தில் என்ன நடக்கிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    டச்சு பிரதமர் ராஜினாமா: நெதர்லாந்தில் என்ன நடக்கிறது?
    டச்சு அரசாங்கம் நேற்று கலைக்கப்பட்டது.

    டச்சு பிரதமர் ராஜினாமா: நெதர்லாந்தில் என்ன நடக்கிறது?

    எழுதியவர் Sindhuja SM
    Jul 08, 2023
    11:54 am

    செய்தி முன்னோட்டம்

    ஐரோப்ப நாடுகளில் நிலவி வரும் பெரும் பிரச்சனையான குடியேற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து நான்கு கட்சிக் கூட்டணிக்குள் சமரசம் செய்ய முடியாத கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் டச்சு அரசாங்கம் நேற்று(ஜூன் 7) கலைக்கப்பட்டது.

    மேலும், நெதர்லாந்தை நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் மார்க் ரூட்டே ராஜினாமா செய்திருப்பதால், இந்த ஆண்டின் இறுதியில் அங்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனினும், ஒரு புதிய ஆளும் கூட்டணி தேர்ந்தெடுக்கப்படும் வரை ரூட்டே மற்றும் அவரது அரசாங்கம் நாட்டை கவனித்து கொள்ள இருக்கிறது.

    "குடியேற்றக் கொள்கையில் கூட்டணி கட்சிகள் மிகவும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர் என்பது இரகசியமல்ல" என்று ரூட்டே நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

    டின்ஜக்

     டச்சு அரசாங்கம் நேற்று கலைக்கப்பட்டது

    மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று, துரதிர்ஷ்டவசமாக, அந்த வேறுபாடுகள் சரிசெய்ய முடியாதவை என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். அதனால்தான் நான் உடனடியாக ... முழு அமைச்சரவையின் ராஜினாமாவை அரசரிடம் எழுத்துப்பூர்வமாக வழங்க இருக்கிறேன்." என்று தெரிவித்தார்.

    கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தொடர்ந்து குடியேற்றக் கொள்கை குறித்து பிரதமர் ரூட்டே பிற அதிகாரிகளுடன் விவாதித்து வந்தார். எனினும், 4 கூட்டணி காட்சிகளை அவரால் சமரசம் செய்ய முடியவில்லை.

    இந்நிலையில், நேற்று நடந்த இறுதி பேச்சு வார்த்தையின் போது, கூட்டணி கட்சிகளுக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகளால், 4 கட்சிகளும் கூட்டணியில் ஒன்றாக இருக்க முடியாது என்று ஒருமனதாக முடிவு செய்தன.

    இதனையடுத்து, டச்சு அரசாங்கம் நேற்று கலைக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐரோப்பா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஐரோப்பா

    கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி  உலகம்
    ஐரோப்பாவில் விருது பெற்ற இந்திய நிறுவனத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் எலக்ட்ரிக் வாகனங்கள்

    உலகம்

    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2 இந்தியா
    சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன் சீனா
    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொலை பஞ்சாப்
    சீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன் சீனா

    உலக செய்திகள்

    உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு  உலகம்
    உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடுகிறது அமெரிக்கா: காரணம் என்ன  சீனா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025