NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பள்ளிக்கு வெளியே குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து அய்ர்லாந்தில் வெடித்த வன்முறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பள்ளிக்கு வெளியே குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து அய்ர்லாந்தில் வெடித்த வன்முறை
    கலவரக்காரர்கள் தீ வைத்ததில் பற்றி எரியும் வாகனம்.

    பள்ளிக்கு வெளியே குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து அய்ர்லாந்தில் வெடித்த வன்முறை

    எழுதியவர் Srinath r
    Nov 24, 2023
    10:49 am

    செய்தி முன்னோட்டம்

    அயர்லாந்து தலைநகர் டப்ளினில் மூன்று குழந்தைகள் உட்பட பலரைக் காயப்படுத்திய கத்திக்குத்துத் தாக்குதலுக்குப் பிறகு வெடித்த வன்முறையில், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.

    பார்னெல் சதுக்கம் கிழக்கு நகர மையத்தில், குழந்தைகள் பள்ளிக்கு வெளியே நடந்த இச்சம்பவத்தில், 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும், 5 வயது சிறுமியும் படுகாயம் அடைந்தனர்.

    மேலும், 6 வயது சிறுமி, 5 வயது சிறுவன் லேசான காயமடைந்தனர்.

    கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிக்கும் 40 வயது நபர், அயர்லாந்து குடிமகன் எனவும், கடந்த 20 வருடமாக அவர் அங்கு இருப்பதாகவும் பிபிசி கூறுகிறது.

    தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபரின், தேசியம்(நேஷனாலிட்டி) குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தவறான தகவலே வன்முறைக்கு காரணம் என கூறப்படுகிறது.

    2nd card

    தீவிர வலதுசாரிகளால் தூண்டப்பட்ட போராட்டம்

    காவல்துறைத் தலைவர் ட்ரூ ஹாரிஸ் "தீவிர வலதுசாரி சித்தாந்தத்தால் உந்தப்பட்ட முழுமையான பைத்தியக்காரப் வன்முறை" என்று குற்றம் சாட்டினார் மற்றும் சம்பவம் குறித்து பரப்பப்படும் "தவறான தகவல்களுக்கு" எதிராகவும் எச்சரித்தார்.

    சில போராட்டக்காரர்கள், "ஐரிஷ் லைவ்ஸ் மேட்டர்" என்ற பதாகைகளுடன், பெரும்பான்மையான புலம்பெயர்ந்தோர் வாழும் பகுதிகளில் பேரணியாக சென்றனர்.

    நீண்ட காலமாக வீடுகள் பற்றாக்குறையால் அயர்லாந்து மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான பரவலான அதிருப்தி அயர்லாந்து மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    தீவிர வலதுசாரி சிந்தனையாளர்கள் பலர், புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதும், அவர்களுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உண்டாக்கி உள்ளது.

    3rd card

    தாக்குதலில் தீவிரவாத நோக்கமில்லை- போலீசார்

    இதன் காரணமாக வெடித்த வன்முறையில், அங்குள்ள பல்வேறு கடைகள் சூறையாடப்பட்டது. காவல்துறை வாகனங்கள் உட்பட சில கார்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

    போராட்டக்காரர்கள் தாக்கியதில், பல போலீசார் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கலவரம் கட்டுக்குள் வந்தது.

    எத்தனை நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் வெளியாகாத நிலையில், பலர் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    மேலும், போலீசார் இது தனிப்பட்ட தாக்குதல் எனவும், இதில் எந்த தீவிரவாத நோக்கமும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    சமூக வலைத்தளம்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    காவல்துறை

    கனடாவில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு: வெறுப்புக்கு இடமில்லை என பிரதமர் கருத்து இஸ்ரேல்
    சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டுவீச்சு; குற்றவாளி கைது  கைது
    லட்சக்கணக்கில் மதிப்புடைய புடவைகளை திருடி சென்ற பெண்கள் - விஜயவாடா விரையும் காவல்துறை  கைது
    4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி ராஜஸ்தான்

    காவல்துறை

    திரையரங்கில் அமைச்சர் மகன் ரமேஷ் தாக்கப்பட்ட விவகாரம் - போலீசார் விசாரணை சென்னை
    கோவையில் பதற்றம் - பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் இமெயில் கோவை
    உத்தரகாண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்  உத்தரகாண்ட்
    கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி

    சமூக வலைத்தளம்

    இனி ஒரே சாதனத்தில் பல வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தலாம், வாட்ஸ்அப்பின் புதிய வசதி வாட்ஸ்அப்
    அரசு ஆவணத்தைக் கொண்டு கணக்கை சரிபார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ் எக்ஸ்
    எக்ஸை முழுமையான கட்டண சமூக வலைத்தளமாக்குகிறாரா எலான் மஸ்க்? எக்ஸ்
    AI முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை.. அப்டேட்களை 'அள்ளிப் போட்டு' வந்த 'மெட்டா கனெக்ட்' நிகழ்வு! மெட்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025