NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கப்பலில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கப்பலில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள் கைது 

    கப்பலில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 28, 2024
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளுடன் சென்ற சந்தேகத்திற்கிடமான பாகிஸ்தான் படகை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று இரவு தடுத்து நிறுத்தினர்.

    உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், கடலோரக் காவல்படையினர் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) இணைந்து ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு பெரும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    இந்நிலையில், போதைப்பொருளுடன், அந்த பாகிஸ்தான் கப்பலில் இருந்த 14 பணியாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த போதைப்பொருள் கப்பலை பிடிக்க கடலோரக் காவல்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்களை ஒரே நேரத்தில் களமிறங்கின.

    இந்த நடவடிக்கையில் கடலோர காவல்படையின் கப்பலான ராஜ்ரதன் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

    இந்தியா 

    தப்பிக்க முயன்ற போதைப்பொருள் கப்பல் 

    "நேற்று இரவு நடந்த ஒரு முக்கிய நடவடிக்கையில், இந்திய கடலோர காவல்படையினர் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பாகிஸ்தான் படகில் இருந்து 14 பணியாளர்களுடன் ரூ. 600 கோடி மதிப்புள்ள சுமார் 86 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது," என்று கடலோர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    "போதைப்பொருள் நிறைந்த கப்பல், தப்பிப்பதற்காக சூழ்ச்சி மற்றும் தந்திரங்களை கையாண்டது. எனினும், வேகமான மற்றும் வலிமையான ஐசிஜி கப்பலான ராஜ்ரதனிடமிருந்து அந்த கப்பலால் தப்பிக்க முடியவில்லை. ராஜ்ரதன் கப்பலின் சிறப்புக் குழு சந்தேகத்திற்கிடமான படகில் ஏறி, முழுமையாக சோதனை நடத்தியது. அதன் பின், அந்த கப்பலில் கணிசமான அளவு போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது" என்று கடலோர காவல்படை கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    போதைப்பொருள்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    இந்தியா

    'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி சீனா
    இந்திய ஐபோன் பயனர்கள் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: ஆப்பிள் அதிர்ச்சி தகவல் ஐபோன்
    இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்  இஸ்ரேல்
    17 இந்தியர்கள் உட்பட 25 பேர் சென்ற கப்பலை சிறைபிடித்தது ஈரான்  ஈரான்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் மீது திடீர் தாக்குதல்: ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான் ஈரான்
    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் ராணுவம்
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்
    பாகிஸ்தான்-ஈரான் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன்வந்தது பாகிஸ்தான்  ஈரான்

    போதைப்பொருள்

    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது இந்தியா
    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  விஜய்
    போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம் தமிழ்நாடு
    'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு  மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025