Page Loader
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுயவை வெகுவாக பாராட்டிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்
நெதன்யாகுயவை வெகுவாக பாராட்டிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுயவை வெகுவாக பாராட்டிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 26, 2025
09:47 am

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர் மீது இருக்கும் தற்போதைய விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு நீண்ட பதிவில், நெதன்யாகு மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டவை மற்றும் நியாயமற்றவை என்று டிரம்ப் கூறினார். இஸ்ரேலின் "மிகச்சிறந்த தருணங்களில்" ஒன்றாக அவர் வர்ணித்த ஈரான் மீதான தாக்குதலுக்குப் பிறகு, நெதன்யாகு இன்னும் விசாரணையை எதிர்கொள்வது அதிர்ச்சியளிப்பதாக டிரம்ப் கூறினார். நெதன்யாகுவின் தலைமையைப் பாராட்டிய அவர், ஈரானை எதிர்த்துப் போராட உதவிய "போர்வீரன்" என்றும் கூறினார். அவரைப் பொறுத்தவரை, இந்த மோதல் இஸ்ரேலின் உயிர்வாழ்விற்கான ஒரு போர்.

ஈரான்

ஈரானின் அச்சுறுத்தலை நீக்கிய நெதன்யாகு

"நானும் பீபியும் ஒன்றாக நரகத்தை கடந்து வந்தோம். இஸ்ரேலின் மிகவும் கடினமான மற்றும் புத்திசாலித்தனமான நீண்டகால எதிரியான ஈரான் உடன் சண்டையிட்டோம். வேறு யாரும் அவரை போல இழப்புகள், சங்கடம் மற்றும் குழப்பத்தை சந்தித்திருக்கமாட்டார்கள்! பீபி நெதன்யாகு ஒரு போர்வீரன், இஸ்ரேல் வரலாற்றில் வேறு எந்த போர்வீரனும் இல்லாத அளவுக்கு." நெதன்யாகுவின் தலைமையின் கீழ், ஈரானிடமிருந்து ஒரு பெரிய அணு ஆயுத அச்சுறுத்தல் நீக்கப்பட்டதாக டிரம்ப் மேலும் கூறினார். "இதன் விளைவாக யாரும் சாத்தியம் என்று நினைக்காத ஒன்று, உலகில் எங்கும் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுதங்களில் ஒன்றை முற்றிலுமாக அகற்றுவது, அது விரைவில் நடக்கும்!" என்று அவர் கூறினார்.

ஊழல் 

நெதன்யாகுவின் ஊழல் விசாரணை

வணிக நலன்களுக்கு உதவுவதற்காக, ஹாலிவுட் பில்லியனர் தயாரிப்பாளரிடமிருந்து பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள சுருட்டுகள் மற்றும் ஷாம்பெயின் பெற்றதாக நெதன்யாகு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனக்கும், தனது குடும்பத்திற்கும் நேர்மறையான விளம்பரத்திற்காக ஊடக அதிபர்களுக்கு சாதகமான விதிமுறைகளை ஆதரித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனது மீதான குற்றச்சாட்டுகள் ஒரு சார்புடைய சட்ட அமைப்பு மற்றும் அவரது நீண்டகால ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் விரோத ஊடகங்களின் விளைவு என்று கூறி, நெதன்யாகு எந்த தவறும் செய்யவில்லை என்று மறுக்கிறார். பல ஆண்டுகளாக அவரையும் அவரது குடும்பத்தினரையும் சூழ்ந்திருந்த ஊழல்கள் அவரது சாட்சியத்துடன் உச்சத்தை எட்டின.