NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்து: மீட்புக் குழுக்கள் இன்னும் வராததால் பதட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்து: மீட்புக் குழுக்கள் இன்னும் வராததால் பதட்டம் 

    ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்து: மீட்புக் குழுக்கள் இன்னும் வராததால் பதட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 19, 2024
    08:16 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று ஜோல்பாவில் கரடுமுரடாக தரையிறங்கியது.

    அதிபரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் தெஹ்ரானில் இருந்து 600 கி.மீ தொலைவில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்பாவில் கடுமையாக தரையிறங்கியது என்பதை ஈரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிடி உறுதிப்படுத்தியுள்ளார்.

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் வாகனத் தொடரணியில் மூன்று ஹெலிகாப்டர்கள் இருந்தன.

    அதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை ஏற்றி சென்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் பத்திரமாக தரையிறங்கின.

    இந்நிலையில், அதிபரை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருப்பதாக தெரிகிறது.

    ஈரான் 

    அஜர்பைஜான் அதிபரை சந்திக்க சென்ற ஈரான் அதிபர்

    மோசமான வானிலை காரணமாக ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டியின் மீட்புக் குழுக்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியயுள்ளனர்.

    ட்ரோன் பிரிவுகளும் அவசர நடவடிக்கைக்கு உதவி வருகின்றன.

    அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் ஒரு அணையைத் திறந்து வைப்பதற்காக மே 19 அன்று ரைசி அஜர்பைஜானுக்கு சென்றிருந்தார் என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

    அந்த இரு நாடுகளும் சேர்ந்து அரஸ் ஆற்றின் மீது கட்டும் மூன்றாவது அணை இதுவாகும்.

    2023 தெஹ்ரானில் உள்ள அஜர்பைஜானின் தூதரகம் மீதான துப்பாக்கித் தாக்குதல் மற்றும் அஜர்பைஜானின் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகள் உட்பட அந்த இரு நாடுகளுக்கிடையே பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    ஈரான்

    அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள் அமெரிக்கா
    ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்குதல் ஏமன்
    செங்கடலில் செல்லும் சர்வதேச வணிக கப்பல்களைத் தாக்கும் கூட்டம்: யாரிந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்? ஏமன்
    பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை  பாகிஸ்தான்

    உலகம்

    கனடாவில் 24 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொலை கனடா
    பாலியல் ரீதியான டீப்ஃபேக் படங்கள் இங்கிலாந்தில் குற்றமாக்கப்பட உள்ளன  இங்கிலாந்து
    கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது  கனடா
    இஸ்ரேல் ஈரானை தாக்கப்போவது அமெரிக்காவுக்கு முன்பே தெரியும்  இஸ்ரேல்

    உலக செய்திகள்

    இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்: இந்தியா கூறுவது என்ன? இஸ்ரேல்
    வெடிபொருட்களுடன் நடமாடிய சந்தேக நபர் கைது: பாரிஸில் உள்ள ஈரான் தூதரகம் முற்றுகை பாரிஸ்
    இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்  இஸ்ரேல்
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டங்கள் அவசரமாக புதுப்பிக்கப்பட்டன இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025