NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஷ்யா-உக்ரைன் மோதல்: அமைதி பேச்சு வார்த்தைக்கு சீனா அழைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்யா-உக்ரைன் மோதல்: அமைதி பேச்சு வார்த்தைக்கு சீனா அழைப்பு
    சீனா அணுசக்தி பயன்பாட்டை முற்றிலுமாக எதிர்க்கிறது.

    ரஷ்யா-உக்ரைன் மோதல்: அமைதி பேச்சு வார்த்தைக்கு சீனா அழைப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 24, 2023
    04:46 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்ய-உக்ரைன் போர் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் முடிகிறது. இதையொட்டி, சீனா வெளியிட்டுள்ள 12 முக்கிய புள்ளிகள் கொண்ட அறிக்கையில் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

    இதற்கு முன், உக்ரைன் போரை பற்றி கருத்து கூற சீனா முற்றிலுமாக மறுத்துவிட்டது. ரஷ்யாவுடன் அளவில்லா நட்பை கொண்டிருப்பதாக கூறிய சீனா, உக்ரைன் போரை, ரஷ்ய படையெடுப்பு என்று கூற முடியாது என்று தெரிவித்திருந்தது.

    போரில் ரஷ்யாவுக்கு சீனா ராணுவ உதவி செய்யும் என்று அமெரிக்கா கூறி இருந்தது. அதை பெய்ஞ்சிங் முற்றிலுமாக மறுத்தது.

    இந்நிலையில் கடந்த புதன்கிழமை, சீனாவின் உயர்மட்ட அரசாங்க அதிகாரி ரஷ்யாவிற்கு சென்று தங்கள் உறவை பலப்படுத்தி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சீனா

    சீனா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    சர்வதேச சமூகம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். சீனா தொடர்ந்து இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகிக்கும்.

    அணு ஆயுதங்களின் அச்சுறுத்தல் அல்லது பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    அணுசக்தி பெருக்கம் தடுக்கப்பட வேண்டும். எந்தவொரு நாடும் எந்த சூழ்நிலையிலும் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை ஆராய்ச்சி செய்வது அல்லது பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். சீனா அணுசக்தி பயன்பாட்டை முற்றிலுமாக எதிர்க்கிறது.

    எல்லோரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்கவும். பொதுமக்கள் தாக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள், மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். என்று கூறப்பட்டிருக்கிறது.

    மேலும், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்ற வேலைகளை யாரும் செய்ய வேண்டாம் போன்ற வாசங்கங்களும் அதிகமாக இந்த அறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    சீனா
    உலகம்

    சமீபத்திய

    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்

    ரஷ்யா

    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? இந்தியா
    ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ன சொல்கிறார் புதின்? உலகம்
    மின்சாரம் இன்றி இருட்டில் வாழும் 9 மில்லியன் உக்ரேனியர்கள்-குற்றம்சாட்டும் அதிபர் ஜெலன்ஸ்கி உலக செய்திகள்
    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்

    சீனா

    போர் விமானங்களை தைவான் நோக்கி பறக்கவிடும் சீனா! உலகம்
    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று கொரோனா
    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம் அரசு திட்டங்கள்
    மீண்டும் பேரழிவை மேற்கொள்ளும் சீனா - மீண்டும் துவங்கிய கொரோனாவின் கோரத்தாண்டவம் கொரோனா

    உலகம்

    வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த நியூஸிலாந்தில் நிலநடுக்கம் நிலநடுக்கம்
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா
    உலக நீர்யானை தினம்: இந்த பிரமாண்ட உயிரினங்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் வாழ்க்கை
    கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு கோவிட் 19
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025