NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 இந்தியர்களுக்கும் ஜாமீன்; ட்ரூடோ ராஜினாமா எதிரொலியா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 இந்தியர்களுக்கும் ஜாமீன்; ட்ரூடோ ராஜினாமா எதிரொலியா?
    காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

    ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 இந்தியர்களுக்கும் ஜாமீன்; ட்ரூடோ ராஜினாமா எதிரொலியா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 09, 2025
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்திய பிரஜைகளுக்கு கனடா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்திய குடிமக்கள் - கரன் பிரார், அமந்தீப் சிங், கமல்ப்ரீத் சிங் மற்றும் கரன்ப்ரீத் சிங் - முதல் நிலை கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    அதோடு வழக்கு விசாரணை பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது மேலும், அடுத்த விசாரணை பிப்ரவரி 11 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு, கனடா பிரதமர் தனது பதவியை விலகுவதாக அறிவித்ததன் தொடற்சியாக வந்துள்ளது.

    யார்?

    யார் அந்த ஹர்தீப் நிஜ்ஜார்?

    ஹர்தீப் நிஜ்ஜார், கனடா நாட்டில் வசித்த ஒரு முக்கிய காலிஸ்தான் சார்பு தலைவர்.

    அவர் ஜூன் 2023 இல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை அடுத்து இந்த வழக்கு உலக அளவில் கவனம் பெற்றது.

    இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா இன்றளவும் மறுத்து வருகிறது. அவை "ஆதாரமற்றவை" என்று கூறியது.

    எனினும் மே 2024 இல் கனடாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை (RCMP) மூலம் நான்கு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

    அதன் பின்னர் இந்தியா-கனடா ராஜதந்திர உறவுகள் மோசமடைந்தது.

    தாக்கங்கள்

    இந்த ஜாமீனால் கனடாவிற்கான தாக்கங்கள் என்ன?

    குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையானது கனேடிய அரசாங்கத்திற்கு ஒரு சாத்தியமான பின்னடைவாகக் கருதப்படுகிறது குறிப்பாக இந்தியாவிற்கு எதிரான அதன் ஆரம்ப கடுமையான நிலைப்பாட்டிற்குப் பிறகு.

    இந்த வழக்கில் தாமதம் மற்றும் கணிசமான ஆதாரங்கள் இல்லாதது இந்த விஷயத்தில் கனடாவின் நிலைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என்று விமர்சகர்கள் தெரிவித்தனர்.

    இந்த வழக்கு தான் இந்தியா-கனடா இராஜதந்திர உறவுகளை சீர்குலைத்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
    கொலை
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கனடா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

    இந்தியா vs கனடா: சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா யார்? கனடா
    இந்தியாவிற்கு எதிரான கனடாவின் 'கடுமையான குற்றச்சாட்டுகளை' ஆதரிக்கும் Five Eyes நட்பு நாடுகள் கனடா
    நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக கனடாவிடம் 'வலுவான ஆதாரம் இல்லை'; ஒப்புக்கொண்ட ட்ரூடோ கனடா
    'பிஷ்னோய் கும்பலை நாடு கடத்த வேண்டும் என கனடாவிடம் கூறப்பட்டது; ஆனால்..':  கனடா

    கொலை

    ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளி போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் தமிழ்நாடு
    ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர்: உண்மையை மறைக்க அரங்கேற்றப்பட்டதா? தமிழ்நாடு
    ஆந்திரா சிறுமி கற்பழிப்பு-கொலை: பள்ளி மாணவர்கள் ஆபாச கிளிப்களில் பார்த்ததை செயல்படுத்த முயன்றதாக வாக்குமூலம் ஆந்திரா
    ஒதுக்கீடு முறையை எதிர்த்து பங்களாதேஷில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் 39 பேர் கொல்லப்பட்டனர் பங்களாதேஷ்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய முயற்சி: இந்திய அரசை சந்தேகிக்கும் அமெரிக்கா அமெரிக்கா
    இந்திய தூதரை வழி மறித்து தகராறு செய்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்: நியூயார்க்கில் பரபரப்பு  அமெரிக்கா
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணை: அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா, ஏன் கனடாவுக்கு ஒத்துழைக்கவில்லை? இந்தியா
    "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா கனடா

    கனடா

    இந்தியா- கனடா உறவு பாதிப்பிற்கு ட்ரூடோ தான் காரணம் என விளாசிய வெளியுறவுத்துறை ஜஸ்டின் ட்ரூடோ
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடாவின் சொத்துக்கள்; இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா பரபரப்பு குற்றச்சாட்டு இந்தியா
    அக்டோபர் 28க்குள் ராஜினாமா செய்ய வேண்டும்; ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கெடு வைத்த கனடா எம்பிக்கள் ஜஸ்டின் ட்ரூடோ
    குறைவான வெளிநாட்டு தற்காலிக பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்: கனடா பிரதமர் ஜஸ்டின் ஜஸ்டின் ட்ரூடோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025