Page Loader
முடிசூட்டு விழாவுக்கு பின் இந்திய வர விரும்பும் பிரிட்டன் மன்னர் சார்லஸ்! 
இந்தியாவில் பயணம் மேற்கொள்ள விரும்பும் பிரிட்டன் மன்னர் சார்லஸ்

முடிசூட்டு விழாவுக்கு பின் இந்திய வர விரும்பும் பிரிட்டன் மன்னர் சார்லஸ்! 

எழுதியவர் Siranjeevi
May 04, 2023
04:35 pm

செய்தி முன்னோட்டம்

பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்குப்பின் அவரது மகன் சார்லஸ் அரியணை ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா வருகிற 6-ஆம் தேதி நடைப்பெறுகிறது. இதற்கான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. 700 ஆண்டு பழமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தை தயார் செய்து வருகின்றனர். இந்த சிம்மாசனத்தில் தான் கையில் செங்கோல், தடி ஏந்தி அரியணை ஏறுவார். மேலும், மன்னர் சார்லஸ் அணிய வரலாற்று மிக்க சிறப்பு ஆடைகளையும் அணியவுள்ளார். புதிய மன்னராக பதவியேற்ற பின் சார்லஸ் அரசு முறை பயணமாக இந்தியா வர விரும்புவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபரான கரண் பிலிமோரியா தெரிவித்து உள்ளார். இந்தியாவுடனான நட்பை வலுப்படுத்த அவர் இந்திய பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post