Page Loader
மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம் 
இந்த பறவைகள் பொதுவாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் காணப்படுகிறது.

மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம் 

எழுதியவர் Sindhuja SM
Apr 16, 2023
10:10 am

செய்தி முன்னோட்டம்

டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய வகை பறவைகளைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த இரண்டு வகை பறவைகளும் பிற பறவைகள் போல் அல்லாமல், ஆபத்தானவையாக கருதப்படுகிறது. இந்த பறவைகளின் இறகுகளில் சக்திவாய்ந்த நியூரோடாக்சின்கள் என்ற அமிலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியூ கினியாவின் காட்டில் காணப்படும் இந்தப் பறவைகள், நச்சுத்தன்மையுள்ள உணவை உட்கொண்டு அதையே விஷமாக மாற்றும் திறனை வளர்த்துள்ளன. விஷத்தை உருவாக்குவது மட்டுமில்லாமல், அதையே இறகுகளில் சேமித்து வைக்கும் திறனும் இந்த பறவைகளுக்கு இருக்கிறது. "எங்களின் சமீபத்திய பயணத்தின் போது, இரண்டு புதிய வகை விஷப் பறவைகளை அடையாளம் கண்டோம். அந்த பறவைகள் விஷத்தை உண்டு உயிர்வாழ்வது மட்டுமல்லாமல் அதை இறகுகளில் சேமிக்கும் திறனையும் கொண்டுள்ளன." என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

DETAILS

விஷத்தை தாங்கும் சக்தி கொண்ட பறவைகள் 

டென்மார்க்கின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் நுட் ஜேன்சன் ஒரு அறிக்கையில் இதை தெரிவித்துள்ளார். இந்த பறவைகள் ரீஜண்ட் விஸ்லர், பேச்சிசெபலா ஸ்க்லெகெலி ஆகிய இனத்தை சேர்ந்தவை. இந்த பறவைகள் பொதுவாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் காணப்படுகிறது. பாட்ராசோடாக்சின் என்ற நியூரோடாக்சினை அதிக செறிவுகளில் இந்த பறவைகள் கொண்டுள்ளன. 'ம்யூடேஷன்' மூலம் இந்த பறவைகளுக்கு விஷத்தை தாங்கும் சக்தி கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் காணப்படும் டார்ட் தவளைகளிடம் இருக்கும் அதே போன்ற விஷம் இந்த பறவைகளிலும் இருக்கிறது. இவற்றை லேசாக தொட்டாலும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். இந்த பறவைகளை தொட்டவுடன், முதலில் தசைப்பிடிப்பு மற்றும் ஹார்ட் அட்டாக் ஏற்படும். அதன் பிறகு விஷம் உடலில் ஏறி உயிரிழக்க நேரிடும்.