NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம் 
    இந்த பறவைகள் பொதுவாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் காணப்படுகிறது.

    மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 16, 2023
    10:10 am

    செய்தி முன்னோட்டம்

    டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய வகை பறவைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த இரண்டு வகை பறவைகளும் பிற பறவைகள் போல் அல்லாமல், ஆபத்தானவையாக கருதப்படுகிறது.

    இந்த பறவைகளின் இறகுகளில் சக்திவாய்ந்த நியூரோடாக்சின்கள் என்ற அமிலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நியூ கினியாவின் காட்டில் காணப்படும் இந்தப் பறவைகள், நச்சுத்தன்மையுள்ள உணவை உட்கொண்டு அதையே விஷமாக மாற்றும் திறனை வளர்த்துள்ளன.

    விஷத்தை உருவாக்குவது மட்டுமில்லாமல், அதையே இறகுகளில் சேமித்து வைக்கும் திறனும் இந்த பறவைகளுக்கு இருக்கிறது.

    "எங்களின் சமீபத்திய பயணத்தின் போது, இரண்டு புதிய வகை விஷப் பறவைகளை அடையாளம் கண்டோம். அந்த பறவைகள் விஷத்தை உண்டு உயிர்வாழ்வது மட்டுமல்லாமல் அதை இறகுகளில் சேமிக்கும் திறனையும் கொண்டுள்ளன." என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

    DETAILS

    விஷத்தை தாங்கும் சக்தி கொண்ட பறவைகள் 

    டென்மார்க்கின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் நுட் ஜேன்சன் ஒரு அறிக்கையில் இதை தெரிவித்துள்ளார்.

    இந்த பறவைகள் ரீஜண்ட் விஸ்லர், பேச்சிசெபலா ஸ்க்லெகெலி ஆகிய இனத்தை சேர்ந்தவை. இந்த பறவைகள் பொதுவாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் காணப்படுகிறது.

    பாட்ராசோடாக்சின் என்ற நியூரோடாக்சினை அதிக செறிவுகளில் இந்த பறவைகள் கொண்டுள்ளன. 'ம்யூடேஷன்' மூலம் இந்த பறவைகளுக்கு விஷத்தை தாங்கும் சக்தி கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவில் காணப்படும் டார்ட் தவளைகளிடம் இருக்கும் அதே போன்ற விஷம் இந்த பறவைகளிலும் இருக்கிறது. இவற்றை லேசாக தொட்டாலும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்.

    இந்த பறவைகளை தொட்டவுடன், முதலில் தசைப்பிடிப்பு மற்றும் ஹார்ட் அட்டாக் ஏற்படும். அதன் பிறகு விஷம் உடலில் ஏறி உயிரிழக்க நேரிடும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்திய ராணுவம்
    மாலத்தீவுக்கு மீண்டும் 50 மில்லியன் டாலர் ரோல்ஓவர் நிதி உதவியை வழங்கியது இந்தியா மாலத்தீவு
    பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது? இந்தியா
    வர்த்தகப் போரில் திடீர் U-turn: அமெரிக்காவும் சீனாவும் வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன அமெரிக்கா

    உலகம்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய பட்டத்து இளவரசர்: யாரிந்த ஷேக் கலீத் உலக செய்திகள்
    சர்வதேச Zero Waste Day : கழிவுகளை பற்றியும், கழிவு மேலாண்மை பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை வாழ்க்கை
    பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ விபத்து: ஒரு குழந்தை உட்பட 31 பேர் பலி பிலிப்பைன்ஸ்
    டொனால்டு டிரம்ப் கைது செய்யப்படுவாரா: அடுத்து என்ன நடக்கும் அமெரிக்கா

    உலக செய்திகள்

    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் ஐநா சபை
    அலெஸ் பியாலியாட்ஸ்கி: நோபல் பரிசு பெற்ற ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை உலகம்
    வாழ்வாதாரம் வேண்டி நிற்கும் காடுகள் சுற்றுச்சூழல்
    1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி தென் கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025