NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பறவை காய்ச்சல் அதிகரிப்பு: 30,000 கோழிகளை கருணைக்கொலை செய்ய இருக்கும் டென்மார்க்
    பறவை காய்ச்சல் அதிகரிப்பு: 30,000 கோழிகளை கருணைக்கொலை செய்ய இருக்கும் டென்மார்க்
    உலகம்

    பறவை காய்ச்சல் அதிகரிப்பு: 30,000 கோழிகளை கருணைக்கொலை செய்ய இருக்கும் டென்மார்க்

    எழுதியவர் Sindhuja SM
    April 27, 2023 | 03:54 pm 1 நிமிட வாசிப்பு
    பறவை காய்ச்சல் அதிகரிப்பு: 30,000 கோழிகளை கருணைக்கொலை செய்ய இருக்கும் டென்மார்க்
    DVFA இன் சிறப்பு அனுமதியின்றி முட்டை அல்லது கோழிகளை நகர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

    டென்மார்க்கில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30,000 கோழிகள் கருணைக்கொலை செய்யப்படும் என்று டேனிஷ் கால்நடை மற்றும் உணவு நிர்வாகம்(DVFA) தெரிவித்துள்ளது. டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் இருந்து தென்மேற்கே சுமார் 188 கிமீ தொலைவில் இருக்கும் அகஸ்டன்போர்க்கில் உள்ள ஒரு பண்ணையில் அதிக பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த பண்ணையில் இருந்த அனைத்து கோழிகளையும் அடுத்த சில நாட்களில் தேசிய அவசரநிலை மேலாண்மை முகமையுடன் இணைந்து DVFA கருணைக்கொலை செய்ய இருக்கிறது. "பறவைக் காய்ச்சலினால் ஏற்படும் ஆபத்து குறைந்துள்ளது. ஆனால், அகஸ்டன்போர்க்கில் இருந்து மீண்டும் பரவ தொடங்கலாம்" என்று DVFA இன் கால்நடை இயக்குனர் சைன் ஹெவிட்-நீல்சன் கூறியுள்ளார்.

    2023ஆம் ஆண்டில் பதிவாகும் நான்காவது பெரும் பரவல் 

    10 கிலோ மீட்டருக்கு மேல், DVFA இன் சிறப்பு அனுமதியின்றி முட்டை அல்லது கோழிகளை நகர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த மண்டலத்திற்குள் உள்ள அனைத்து கோழி உரிமையாளர்களும் தங்கள் பறவை மந்தைகளை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. DVFAஇன் தரவுகளின் படி, 2023ஆம் ஆண்டு தொடங்கிய பிறகு டென்மார்க்கில் பதிவாகும் பறவைக் காய்ச்சலின் நான்காவது பெரும் பரவல் இதுவாகும். ஜனவரி மாதம் ஒரு பெரிய கோழி பண்ணையிலும், பிப்ரவரி மாதம் ஒரு வான்கோழி பண்ணையிலும், மார்ச் மாதம் ஒரு சிறிய கோழி பண்ணையிலும் அதிக பரவல் ஏற்பட்டது. இதனால், சுமார் 65,000 பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட்டன. தற்போது 30,000 கோழிகள் கருணைக்கொலை செய்யப்பட உள்ளன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உலகம்
    உலக செய்திகள்

    உலகம்

    வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதோடு அவர்கள் ஆட்சி தகர்க்கப்படும்: ஜோ பைடன்  வட கொரியா
    சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர்  இந்தியா
    மாட்ரிட் ஓபன் 2023 தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகிய பிரபல வீராங்கனை விளையாட்டு
    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை  இந்தியா

    உலக செய்திகள்

    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்   சிங்கப்பூர்
    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு  சூடான்
    2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு  அமெரிக்கா
    அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!  சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023