NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்!
    சமத்துவத்திற்கான அடுத்த அடியை எடுத்து வைக்கிறது அமெரிக்கா (படம்: News 18 Tamilnadu)

    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 17, 2022
    12:30 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க அதிபர் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, தன்பாலின(Same sex) ஈர்ப்பாளர் திருமணங்கள் மற்றும் கலப்பின(Inter-racial) திருமணங்கள் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டார்.

    இது குறித்து பேசிய பைடன், "இந்த சட்டமும் இதனால் பாதுகாக்கப்படும் அன்பும் எல்லா விதமான வெறுப்புகளையும் தகர்த்து எறிந்து விடும்" என்று கூறி இருக்கிறார்.

    சில ஆண்டுகளாகவே தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணங்களுக்கு உலக நாடுகள் அங்கீகாரம் அளித்து வருகிறது.

    இந்த வகையில், 2015 ஆம் ஆண்டிலேயே அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒரே பாலின திருமணங்கள் இனி சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படும் என்று அறிவித்தது.

    இது போன்ற திருமணங்களைப் பாதுகாப்பதற்காகவே தற்போது அமெரிக்க அரசால் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

    திருமண சட்டம்

    இந்திய தன் பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டம்- ஒரு அப்டேட்!

    சமீப காலமாக இந்தியாவில் பரவலாக ஒரே பாலின திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் இது போன்ற திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்றும் சேர்ந்து வாழ்பவர்கள் (living together) பாதுகாப்பிற்குக் கீழ் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு என்றும் அரசு தெரிவித்திருந்தது.

    ஆனால், இதை திருமணங்களாக சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்று பலதரப்பினர் நாடு முழுவதும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    டெல்லி உயர் நீதிமன்றம் போன்ற நீதிமன்றங்களில் இது தொடர்பான மனுக்கள் நிலுவையில் இருக்கிறது.

    டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருக்கும் இது தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றவும் பல மனுக்கள் போடப்பட்டுள்ளது.

    இந்த மனுக்களுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சமீபத்தில்(டிச.14) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா
    உலகம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல்
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! கூகிள் தேடல்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025