NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவின் பதிலடியை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய இங்கிலாந்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் பதிலடியை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய இங்கிலாந்து
    டெல்லியில் இருக்கும் இங்கிலாந்து தூதரகத்திற்கு முன் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இன்று மதியம் டெல்லி போலீசார் அகற்றினர்

    இந்தியாவின் பதிலடியை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய இங்கிலாந்து

    எழுதியவர் Sindhuja SM
    Mar 22, 2023
    05:53 pm

    செய்தி முன்னோட்டம்

    லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியில் இன்று(மார் 22) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காலிஸ்தான் ஆதரவாளர்களால் பெரும் போராட்டம் நடக்க இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் இருக்கும் இங்கிலாந்து தூதரகத்தில் பாதுகாப்பு குறைக்கப்பட்ட சில மணி நேரத்தில், இங்கிலாந்தில் இருக்கும் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    மத்திய லண்டனில் உள்ள இந்தியா பிளேஸ் என்று அழைக்கப்படும் கட்டிடத்திற்கு வெளியே போலீஸ் அதிகாரிகள், தொடர்பு அதிகாரிகள் மற்றும் ரோந்து அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜன்னல்களுக்கு இடையில் ஒரு மாபெரும் இந்தியக் கொடி கட்டப்பட்டிருக்கிறது.

    இந்தியா

    இங்கிலாந்து தூதரகத்தில் பாதுகாப்பு குறைப்பு

    ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடந்த வன்முறைப் போராட்டத்தின் போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தூதரகத்தின் பால்கனியில் ஏறி இந்திய கொடியை கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர்.

    இந்த போராட்டம் தொடங்கி நீண்ட நேரத்திற்கு பிறகு தான் லண்டன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இது இந்திய தரப்பினருக்கு கோபத்தை உண்டாக்கியது.

    இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பே, காலிஸ்தான் ஆதரவாளர்களால் பெரும் போராட்டம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற தகவலை இந்தியா, பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    அதனால், கோபமடைந்த இந்தியா, டெல்லியில் இருக்கும் இங்கிலாந்து தூதரகத்திற்கு முன் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இன்று மதியம் அகற்றியது.

    இதனையடுத்து, இன்று மாலை இங்கிலாந்தில் இருக்கும் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்
    இங்கிலாந்து

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    யூடியூப் மியூசிக்கின் புதிய அப்டேட் - தானாக பதிவிறக்கம் செய்யலாம்! தொழில்நுட்பம்
    ராகுல் காந்தி வீட்டிற்கு சென்ற போலீஸ்: நாடு தழுவிய போராட்டத்தை நடத்துமா காங்கிரஸ் காங்கிரஸ்
    பணிநீக்கத்தை தவிர்க்க ஆப்பிள் நிறுவனம் இவற்றை எல்லாம் செய்கிறது ஆப்பிள்
    இன்றைய நாளின் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! தங்கம் வெள்ளி விலை

    உலகம்

    சோஹோ ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு இந்தியா
    உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது: ரிஷி சுனக் சீனா
    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தான்
    இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள் பாகிஸ்தான்

    இங்கிலாந்து

    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்
    கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம் உலக செய்திகள்
    இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சை: இளவரசர் ஹாரி தாக்கப்பட்டாரா?! உலகம்
    மனிதர்களின் உயிர் உங்களுக்கு பகடைக்காயா?! இளவரசர் ஹாரியை விமர்சிக்கும் தாலிபான்! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025