NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழிக்கு பழி: இங்கிலாந்து தூதரகத்தின் பாதுகாப்பை குறைத்த இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பழிக்கு பழி: இங்கிலாந்து தூதரகத்தின் பாதுகாப்பை குறைத்த இந்தியா
    டெல்லியில் இருக்கும் இங்கிலாந்து தூதரகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டது

    பழிக்கு பழி: இங்கிலாந்து தூதரகத்தின் பாதுகாப்பை குறைத்த இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    Mar 22, 2023
    02:24 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வார இறுதியில் லண்டனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு வெளியே நடந்த வன்முறை போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் தூதரகம் மற்றும் தூதுவரின் இல்லத்திற்கான பாதுகாப்பை இந்தியா குறைக்கத் தொடங்கியுள்ளது.

    டெல்லியில் இருக்கும் இங்கிலாந்து தூதரகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த தடுப்புகளும், ராஜாஜி மார்க்கில் உள்ள பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸின் இல்லத்திற்கு முன் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளும் இன்று(மார் 22) பிற்பகல் அகற்றப்பட்டன.

    இருப்பினும், பிரிட்டிஷ் தூதரகத்திற்கு பணியமர்த்தப்பட்டிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் குறைக்கப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடந்த வன்முறைப் போராட்டத்தின் போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தூதரகத்தின் பால்கனியில் ஏறி இந்திய கொடியை கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர்.

    இந்தியா

    லண்டனில் இருக்கும் இந்திய தூதரகத்தில் நடந்த பெரும் வன்முறை போராட்டம்

    இந்த போராட்டம் தொடங்கி நீண்ட நேரத்திற்கு பிறகு தான் லண்டன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இது இந்திய தரப்பினருக்கு கோபத்தை உண்டாக்கியது.

    இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பே, காலிஸ்தான் ஆதரவாளர்களால் பெரும் போராட்டம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற தகவலை இந்தியா பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    அதனால், இந்தியா மிக கோபமாக பதிலளித்தது. பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் கிறிஸ்டினா ஸ்காட் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டார்.

    காலிஸ்தான் ஆதரவாளர்களால் இவ்வளவு பெரிய போராட்டம் நடத்தப்பட்ட போது, பிரிட்டிஷ் பாதுகாப்பு முற்றிலும் இல்லாதததற்கான காரணத்தை இந்தியா கேட்டிருந்தது.

    மேலும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு, கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இங்கிலாந்து

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    LGBTQ மக்கள் இரத்த தான செய்யலாமா? - விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம் உலகம்
    உலகளவில் அதிகார பொறுப்பில் இருந்த பெண் தலைவர்கள் ஓர் பார்வை உலகம்
    பிஎஸ்என்எல்-இன் அற்புதமான ரூ. 87 திட்டம் - இவ்வளவு சலுகைகளா? பிஎஸ்என்எல்
    இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர் ஜப்பான்

    இங்கிலாந்து

    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்
    கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம் உலக செய்திகள்
    இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சை: இளவரசர் ஹாரி தாக்கப்பட்டாரா?! உலகம்
    மனிதர்களின் உயிர் உங்களுக்கு பகடைக்காயா?! இளவரசர் ஹாரியை விமர்சிக்கும் தாலிபான்! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025