NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனாவை தாஜா செய்ய இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் குறித்து பேசி சர்ச்சையைக் கிளப்பிய முகமது யூனுஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனாவை தாஜா செய்ய இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் குறித்து பேசி சர்ச்சையைக் கிளப்பிய முகமது யூனுஸ்
    சீனாவை தாஜா செய்ய இந்தியாவின் பகுதிகள் குறித்து முகமது யூனுஸ் சர்ச்சை பேச்சு

    சீனாவை தாஜா செய்ய இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் குறித்து பேசி சர்ச்சையைக் கிளப்பிய முகமது யூனுஸ்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 31, 2025
    07:35 pm

    செய்தி முன்னோட்டம்

    பங்களாதேஷின் இடைக்கால தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், தனது நான்கு நாள் பெய்ஜிங் பயணத்தின் போது சீனாவை தாஜா செய்து முதலீட்டை ஈர்ப்பதற்காக பேசியுள்ள ஒரு விஷயம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    நிலையான உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி குறித்த உயர்மட்ட வட்டமேசைக் கூட்டத்தில் உரையாற்றிய முகமது யூனுஸ், இந்தியாவின் நிலத்தால் சூழப்பட்ட வடகிழக்கு பிராந்தியத்திற்கும், நேபாளம் மற்றும் பூட்டானுக்கும் நுழைவாயிலாக பங்களாதேஷை சீனா பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்தார்.

    பிராந்தியத்தில் கடலின் ஒரே பாதுகாவலராக பங்களாதேஷ் உள்ளதாக முகமது யூனுஸ் வலியுறுத்தினார்.

    மேலும், சீனா பொருளாதார ரீதியாக காலூன்றவும், சுற்றியுள்ள நாடுகளுடன் இணைப்பைப் பயன்படுத்தவும் அழைப்பு விடுத்தார். அவரது கருத்துக்கள் இந்திய நிபுணர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளன.

    பாதுகாப்பு கவலை

    பாதுகாப்பு ஆய்வாளர்கள் கவலை

    பொருளாதார நிபுணர் சஞ்சீவ் சன்யால் இந்தச் சூழலில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டிருப்பதன் முக்கியத்துவத்தை அவர் பேசியுள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், இந்தப் பகுதியில் சீனாவின் ஈடுபாடு குறித்து பாதுகாப்பு ஆய்வாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவின் வடகிழக்கு எல்லைக்கு அருகில், குறிப்பாக அருணாச்சலப் பிரதேசத்தில், அது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி எனக் கூறிக்கொண்டு தனது இருப்பை சீனா அதிகரித்து வருகிறது.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவும் தனது எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த அருணாச்சல எல்லைப்புற நெடுஞ்சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்தியுள்ளது.

    ஷேக் ஹசீனா வெளியேற்றத்திற்குப் பிறகு, இந்தியா-பங்களாதேஷ் உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், முகமது யூனூஸின் சீனப்பயணம் அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    சீனா
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    பங்களாதேஷ்

    பங்களாதேஷின் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் ராஜினாமா செய்ய முடிவு உச்ச நீதிமன்றம்
    பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள் போராட்டம்
    செயின்ட் மார்டின் தீவை தர மறுத்ததால் அமெரிக்காவின் சதிவேலை; ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றச்சாட்டு ஷேக் ஹசீனா
    ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவளித்தது சரிதான்; காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து ஷேக் ஹசீனா

    சீனா

    சீனாவில் இரண்டே நாட்களில் ரூ.20 கோடி வசூல் செய்தது விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம்  விஜய் சேதுபதி
    சீனாவின் இரண்டு பவர் பேங்க்களுக்கு தடை; இந்திய தர நிர்ணய அமைப்பு உத்தரவு இந்தியா
    திடீர் ட்விஸ்ட்; பதவியேற்பு விழாவில் பங்கேற்கு சீன அதிபருக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு என தகவல் டொனால்ட் டிரம்ப்
    உலகின் மிகப்பெரிய செயற்கைத் தீவு விமான நிலையத்தை உருவாக்கும் சீனா விமான நிலையம்

    இந்தியா

    கடந்த கால மோதல் இருந்தாலும்... பாகிஸ்தானுடனான உறவு குறித்து பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    இந்தியா நியூசிலாந்து இடையே மீண்டும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தொடக்கம்  நியூசிலாந்து
    ஐபோனைத் தொடர்ந்து இந்தியாவில் ஏர்போட்ஸ் உற்பத்தியைத் தொடங்குகிறது ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம்
    ஐந்து ஆண்டுகளில் ரூ.400 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தியுள்ள ராமர் கோவில் நிர்வாகம் ராமர் கோயில்

    உலகம்

    433 ஆண்டுகால கல்வி நிறுவன வரலாற்றில் முதல்முறையாக கட்டிடத்திற்கு பெண்ணின் பெயரை வைத்த டப்ளின் டிரினிட்டி கல்லூரி கல்லூரி
    மியான்மரில் முடிவுக்கு வருகிறதா ராணுவ ஆட்சி? பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு மியான்மர்
    உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்; 20 பேர் பலியானதாக உக்ரைன் தகவல் ரஷ்யா
    பாகிஸ்தானுக்கு யாரும் செல்ல வேண்டாம்; அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025