NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
    உடல்நலக்குறைவால் அதிகாலை மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டார் கலிதா ஜியா

    பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 12, 2024
    01:32 pm

    செய்தி முன்னோட்டம்

    பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, இன்று, வியாழக்கிழமை அதிகாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

    79 வயதான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர், உடல்நலக்குறைவால் அதிகாலை 1:40 மணியளவில் Evercare மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டார் என்று BNP ஊடக செல் உறுப்பினர் சைருல் கபீர் கான் கூறியதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது.

    அவரது மருத்துவர், பேராசிரியர் ஏஇசட்எம் ஜாஹித் ஹொசைன், மருத்துவ வாரியம் பல பரிசோதனைகளை பரிந்துரைத்துள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் ஒரு தனியார் அறையில் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    உடல்நிலை

    பல உடல்நல பிரச்சனைகளால் போராடி வரும் கலீதா ஜியா

    ஆகஸ்ட் 21 அன்று, ஜியா அதே மருத்துவமனையில் 45 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

    பிஎன்பி தலைவர் நீண்டகாலமாக கல்லீரல் ஈரல் அழற்சி, மூட்டுவலி, நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரகம், நுரையீரல், இதயம் மற்றும் கண்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுடன் போராடி வருகிறார்.

    ஜூன் 23 அன்று ஒரு பேஸ்மேக்கர் அவருக்கு பொறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    நவம்பர் 2021 இல் அவருக்கு கல்லீரல் ஈரல் அழற்சி இருப்பது கண்டறியப்பட்டதிலிருந்து அவரது மருத்துவர்கள் அவரை வெளிநாடுகளுக்கு அனுப்ப பரிந்துரைத்தனர்.

    கடந்த 5 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் இருந்த முன்னாள் பிரதமர், ஆகஸ்ட் 6ஆம் தேதி வங்கதேச அதிபர் முகமது சஹாபுதின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பங்களாதேஷ்

    என்ஐஏ ரெய்டில் 3 வங்கதேசத்தினர் கைது; போலி ஆதார் கொண்டு வசித்துவந்தது அம்பலம் என்ஐஏ
    வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு  கொல்கத்தா
    வங்கதேச தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஷேக் ஹசீனா மீண்டும் பதவியேற்க வாய்ப்பு  தேர்தல்
    5வது முறையாக ஆட்சியை கைப்பற்றினார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா  பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025