NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆபத்தில் தேசம்; சட்ட ஒழுங்கை பராமரிக்க பங்களாதேஷ் ராணுவ தளபதி பொதுமக்களுக்கு வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆபத்தில் தேசம்; சட்ட ஒழுங்கை பராமரிக்க பங்களாதேஷ் ராணுவ தளபதி பொதுமக்களுக்கு வலியுறுத்தல்
    ஆபத்தில் தேசம்; சட்ட ஒழுங்கை பராமரிக்க பங்களாதேஷ் ராணுவ தளபதி வலியுறுத்தல்

    ஆபத்தில் தேசம்; சட்ட ஒழுங்கை பராமரிக்க பங்களாதேஷ் ராணுவ தளபதி பொதுமக்களுக்கு வலியுறுத்தல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 27, 2025
    10:29 am

    செய்தி முன்னோட்டம்

    பங்களாதேஷ் ராணுவத் தளபதி ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான், நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

    இதற்குக் காரணம் தொடர்ச்சியான அரசியல் கொந்தளிப்பு மற்றும் ஆழமடைந்து வரும் சமூகப் பிளவுகள் என்று கூறியுள்ளார்.

    ஆயுதப்படை விழாவில் பேசிய அவர், உள்நாட்டு மோதல்கள் மற்றும் வன்முறை நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்துவதாக எச்சரித்தார்.

    நாம் கண்ட இந்த அராஜகம் நாமே உருவாக்கியது என்று ஜெனரல் ஜமான் கூறினார்.

    நீதித்துறை வழக்குகள் மற்றும் சிறைத்தண்டனைகள் காரணமாக காவல்துறை சரியாக செயல்படவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், இதனால் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு ராணுவத்தின் மீது அதிக பொறுப்பு சுமத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

    ஆபரேஷன் டெவில் ஹன்ட்

    வன்முறையை கட்டுப்படுத்த ஆபரேஷன் டெவில் ஹன்ட்

    பங்களாதேஷில் சமீபத்திய மாதங்களில் வன்முறை, நாசவேலை மற்றும் கலவரம் அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்புப் படைகள் ஆபரேஷன் டெவில் ஹன்ட் எனும் நடவடிக்கையைத் தொடங்கினர். இதன் மூலம் 8,600 பேர் கைது செய்யப்பட்டனர்.

    முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், இவர்க்ஜல் நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாட்டிலிருந்து வெளியேறச் செய்த மாணவர் தலைமையிலான புரட்சி குறித்தும் ஜெனரல் ஜமான் கவலை தெரிவித்தார்.

    ஷேக் ஹசீனா பதவி விலகியதிலிருந்து, ராணுவம் காவல்துறை போன்ற நீதித்துறை அதிகாரங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.

    இது காணாமல் போனவர்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது.

    தேர்தல்

    தேர்தல் நடத்துவதற்காக சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம்

    மீண்டும் மீண்டும் வன்முறை சுழற்சிகளைத் தடுக்க இதுபோன்ற வழக்குகள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பொதுத் தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுவதால், சட்ட ஒழுங்கை மீட்டெடுக்க இடைக்கால அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்குமாறு ஜெனரல் ஜமான் பொதுமக்களை வலியுறுத்தினார்.

    இதற்கிடையில், மாணவர் தலைவர் நஹித் இஸ்லாம் பிப்ரவரி 28 அன்று ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    ஷேக் ஹசீனா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை
    இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் வங்கிக் கணக்கு
    ஜூன் மாதத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்க விலை; இன்றைய (ஜூன் 2) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு அமெரிக்கா

    பங்களாதேஷ்

    பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தேர்தலுக்கு பின்னர் நாடு திரும்புவார் எனத்தகவல் ஷேக் ஹசீனா
    விரைவில் பங்களாதேஷ் திரும்புகிறார் ஷேக் ஹசீனா; மகன் சஜீப் வசேத் ஜாய் தகவல் ஷேக் ஹசீனா
    பங்களாதேஷின் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் ராஜினாமா செய்ய முடிவு உச்ச நீதிமன்றம்
    பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள் போராட்டம்

    ஷேக் ஹசீனா

    பங்களாதேஷ் கொந்தளிப்புக்கு மத்தியில் அனைத்து கட்சி கூட்டம்; எம்.பி.க்களிடம் விளக்கம் அளிக்கிறார் ஜெய்சங்கர்  பங்களாதேஷ்
    பங்களாதேஷ் நெருக்கடி: ஹோட்டலுக்கு தீ வைத்த வன்முறை கும்பல்; 24 பேர் உயிருடன் எரிப்பு  பங்களாதேஷ்
    ஷேக் ஹசீனாவின் நீட்டிக்கப்பட்ட தாங்கும் காலத்திற்கு டெல்லி எவ்வாறு தயாராகிறது டெல்லி
    செயின்ட் மார்டின் தீவை தர மறுத்ததால் அமெரிக்காவின் சதிவேலை; ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றச்சாட்டு பங்களாதேஷ்

    உலகம்

    பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஒன்பதாவது கூட்டாளர் நாடாக இணைந்தது நைஜீரியா பிரிக்ஸ்
    நேட்டோ நாடுகளுக்கு கிடுக்கிப்பிடி; பாதுகாப்பு பட்ஜெட்டை ஜிடிபியில் 5% ஆக அதிகரிக்க டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தல் டொனால்ட் டிரம்ப்
    உக்ரைன் மோதல் குறித்து டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விருப்பம் விளாடிமிர் புடின்
    26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அமெரிக்கா

    உலக செய்திகள்

    2030 ஃபிஃபா உலகக்கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்லும் மொராக்கோ; பகீர் தகவல்  மொராக்கோ
    முகமது யூனுஸ் அரசாங்கத்திற்கு ஆப்பு; நிதியுதவியை மொத்தமாக நிறுத்தியது அமெரிக்கா பங்களாதேஷ்
    காற்று மாசுபாடு அதிகரிப்பால் தலைநகரில் பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவசம்; தாய்லாந்து அரசு அறிவிப்பு தாய்லாந்து
    குடியரசு தினத்தன்று லண்டன் இந்திய தூதரகத்தின் அடாவடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குடியரசு தினம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025