NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்கா பாலம் விபத்து: மேடே அழைப்பு விடுத்த இந்திய குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்கா பாலம் விபத்து: மேடே அழைப்பு விடுத்த இந்திய குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன்
    கரையில் இருந்த அதிகாரிகளை எச்சரித்ததற்காக கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளார்

    அமெரிக்கா பாலம் விபத்து: மேடே அழைப்பு விடுத்த இந்திய குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 27, 2024
    01:32 pm

    செய்தி முன்னோட்டம்

    பால்டிமோர் நகரில் உள்ள 2.57 கிமீ நீளமுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம், கொள்கலன் கப்பலொன்றில் மோதியதில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து காணாமல் போன ஆறு கட்டுமானத் தொழிலாளர்கள், இறந்துவிட்டதாக அனுமானிக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்த உடன், கரையில் இருந்த அதிகாரிகளை எச்சரித்ததற்காக கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளார்.

    கப்பல் இப்போது இடிந்து விழுந்த பிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜின் இடிபாடுகளில் சிக்கியுள்ளது.

    இந்த ஸ்காட் கீ பிரிட்ஜ் கிட்டத்தட்ட 3 கிமீ நீளமும், ஒரு பெரிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகவும் செயல்பட்டு வந்தது.

    இதற்கிடையே காணாமல் போன தொழிலாளர்களை தேடும் பணியும் புதன்கிழமை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

    கப்பல் விபத்து

    இடைநிறுத்தப்பட்ட மீட்பு பணிகள்

    ஊடக அறிக்கைகளின்படி, பாலம் இடிந்து விழுந்ததில் எட்டு பேர் படப்ஸ்கோ ஆற்றில் வீசப்பட்டனர்.

    ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை. இதுவரை 2 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.

    ஆற்றின் வேகமும், வெப்பநிலையும், மீட்பு குழுவினருக்கு சவாலாக இருப்பதால், பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    நியூயார்க்கிற்கும், வாஷிங்டனுக்கும் இடையே அமைந்துள்ள இந்த பாலம், பால்டிமோர் நகர நெரிசலை தவிர்க்க விரும்பும் ஓட்டுநர்களுக்கு முக்கியப் பாதையாக செயல்பட்டு வந்தது.

    கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 1.30 மணியளவில்(அமெரிக்க உள்ளூர் நேரம்) டாலி என்று பெயரிடப்பட்ட கொள்கலன் கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தை நோக்கி வேகமாக வந்து இடித்ததில், பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

    இந்த சரக்கு கப்பலில் 22 இந்திய பணியாளர்கள் இருந்தனர்.

    ஜோ பைடன் 

    சரியான நேரத்தில் 'மே டே' அறிவிப்பை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன்

    இந்த விபத்து குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே அதிபர், பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தை புனரமைப்பதற்கான முழுச் செலவையும் மத்திய அரசு செலுத்த வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று கூறினார்.

    அதிபர் சார்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின்படி,"இந்த அவசரநிலைக்கு நாங்கள் தேவையான அனைத்து கூட்டாட்சி வளங்களையும் அனுப்பப் போகிறோம்...நாங்கள் ஒன்றாக அந்த துறைமுகத்தை மீண்டும் கட்டப் போகிறோம்".

    "கப்பலில் இருந்த பணியாளர்கள் தங்கள் கப்பலின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக மேரிலாண்ட் போக்குவரத்துத் துறையை எச்சரிக்க முடிந்தது, நீங்கள் அனைவரும் அறிந்தது. இதன் விளைவாக, உள்ளூர் அதிகாரிகளால் பாலத்தை போக்குவரத்துக்கு மூட முடிந்தது. இது சந்தேகத்திற்கு இடமின்றி உயிர்களைக் காப்பாற்றியது," என்று அந்த அறிக்கை கூறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    விபத்து
    ஜோ பைடன்

    சமீபத்திய

    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்
    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது இந்தியா
    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsஎஸ்ஆர்எச்: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025

    அமெரிக்கா

    அமெரிக்க அதிபர் தேர்தலில் விவேக் ராமசாமி விலகல்; டொனால்ட் டிரம்பை ஆதரிப்பதாக அறிவிப்பு  விவேக் ராமசாமி
    பன்னூன் கொலைச் சதியில் ஈடுபட்ட இந்தியரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம்: செக் நீதிமன்றம் இந்தியா
    சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவ பரிந்துரைத்தார் அமெரிக்க அதிபர் பைடன்  இஸ்ரேல்
    அமெரிக்காவில் தொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து கோவில்கள்: 2 வாரங்களில் 6 கோவில்கள் தாக்கப்பட்டதாக தகவல்  உலகம்

    விபத்து

    ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ? தமிழக காவல்துறை
    உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு உத்தரகாண்ட்
    சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மத்திய அரசின் புதிய திட்டம் இந்தியா
    கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் தம்பதி பரிதாப பலி  கேரளா

    ஜோ பைடன்

    நிவாரண பொருட்களுடன் 20 லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன இஸ்ரேல்
    இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ்
    அமெரிக்காவின் H-1B விசாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் குடியரசு தலைவர்
    இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது- சீனா அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025