Page Loader
வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு 
5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு 

எழுதியவர் Sindhuja SM
Dec 02, 2023
12:09 pm

செய்தி முன்னோட்டம்

வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் மையம் கொமிலாவில் இருந்து தென்மேற்கே 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. வங்கதேசத்தில் காலை 9:05 மணியளவில் (உள்ளூர் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம்(NCS) தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் ஹூக்ளியின் பல்வேறு மாவட்டங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இன்று காலை 8:25 மணியளவில் லடாக்கில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது என்பது குறிப்பிடத்தக்கது. லடாக் நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைத்திருந்ததாக NCS கூறியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தாலும், இதுவரை உயிர் சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் ட்விட்டர் பதிவு