NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரிட்டன் அரச குடும்பத்தின் மானியத்தை 45% உயர்த்த அரசு முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரிட்டன் அரச குடும்பத்தின் மானியத்தை 45% உயர்த்த அரசு முடிவு
    பிரிட்டன் அரச குடும்பத்தின் மானியத்தை 45% உயர்த்த அரசு முடிவு

    பிரிட்டன் அரச குடும்பத்தின் மானியத்தை 45% உயர்த்த அரசு முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 21, 2023
    02:39 pm

    செய்தி முன்னோட்டம்

    அரச குடும்பத்தின் மானியத்தை 45% அளவிற்கு உயர்த்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி அரச குடும்பத்தின் மானியம் தற்போதைய ₹908 கோடியிலிருந்து ₹1,320 கோடியாக அதிகரிக்க உள்ளது.

    இந்த அதிகரிப்பு 2025 முதல் அமலுக்கு வரும் நிலையில், பிரிட்டன் குடிமக்களின் வரிப்பணத்தில் அதிக தொகை, அரச குடும்பத்திற்காக செலவிடப்படும்.

    முன்னதாக, வியாழன் (ஜூலை 20) அன்று பிரிட்டன் அரசின் கருவூலம் அரச நிதி பற்றிய மதிப்பாய்வை வெளியிட்டது.

    இது இறையாண்மை மானியம் என அழைக்கப்படும் அரச குடும்பத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டம், கிரவுன் எஸ்டேட் எனப்படும் தேசிய சொத்து இலாகாவின் இலாபத்துடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

    anti monarchists oppose fund increase

    மன்னராட்சிக்கு எதிரானவர்கள் அரச குடும்பம் மீது விமர்சனம்

    கருவூலத்தால் வெளியிடப்பட்ட ராயல் நிதியத்தின் மதிப்பாய்வு, மன்னர் சார்லஸ் கிரவுன் எஸ்டேட் நிதியை, பொது மக்களின் சேவைகளுக்கு அனுப்ப, தனது ஊதியத்தை குறைப்பதாக அறிவித்ததன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இருப்பினும், அரச குடும்பம் இதற்கு மாறாக 2025இல் இருந்து, குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வைப் பெற உள்ளது, மன்னராட்சியை எதிர்ப்பவர்களிடம் அதிருப்தியை கொடுத்துள்ளது.

    இதற்கிடையே, கருவூலத்தின் செய்தித் தொடர்பாளர் ஜஸ்டினா க்ராப்ட்ரீ, அரச குடும்ப மானியம் 2020 முதல் மாறாமல் உள்ளதாகவும், தற்போதைய இந்த தற்காலிக அதிகரிப்பு, பக்கிங்ஹாம் அரண்மனை புதுப்பிப்புக்கான மீதமுள்ள செலவுகளை ஈடுசெய்வதற்குதான் என தெரிவித்துள்ளார்.

    மானியத்தை 2026 இல் மீண்டும் மதிப்பாய்வு செய்து, 2027 இல் மீண்டும் குறைக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக க்ராப்ட்ரீ தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரிட்டன்
    இங்கிலாந்து

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    பிரிட்டன்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல் விளையாட்டு
    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா

    இங்கிலாந்து

    உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது: ரிஷி சுனக் உலகம்
    இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டோ குடும்பத்தில் அடிக்கடி நடக்கும் சண்டைகள் உலகம்
    மெகா சுனாமியால் அழியப்போகும் பேராபத்து? விஞ்ஞானிகள் எச்சரிக்கை! தொழில்நுட்பம்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025