NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள்
    கரை ஒதுங்கிய உடல்களில் பறவை காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை

    உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 22, 2023
    03:50 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 10 நாட்களில், தென் அமெரிக்காவின் கிழக்கு உருகுவே கடற்கரையில் சுமார் 2,000 பெங்குயின்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

    இந்த பறவைகள் பறவை காய்ச்சலால் இறக்கவில்லை என்றும், இது ஒரு மர்மமாகவே உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அட்லாண்டிக் பெருங்கடலில் உயிரிழந்த மாகெல்லானிக் பெங்குவின் இனத்தை சேர்ந்த குட்டிகள் உருகுவே கடற்கரையில் கரை ஒதுங்கியதாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விலங்கினங்கள் துறையின் தலைவர் கார்மென் லீசாகோயன் கூறியுள்ளார்.

    "இவை தண்ணீரில் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த பெங்குயின்களிடம் தொண்ணூறு சதவீதம் கொழுப்பு இருப்புக்கள் இல்லை. மேலும், இவை வெற்று வயிற்றில் உயிரிழந்துள்ளன. பெரும்பாலும் இளம் குட்டிகளின் உடல்களே கரை ஒதுங்கி இருக்கிறது" என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

    விஜ்வ்

    பறவை காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை

    கரை ஒதுங்கிய உடல்களில் பறவை காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    மாகெல்லானிக் பெங்குவின் தெற்கு அர்ஜென்டினாவில் கூடு கட்டுகின்றன.

    தெற்கு அரைக்கோளத்தின் குளிர்காலத்தில், அவை உணவு மற்றும் வெப்பமான நீரைத் தேடி வடக்கே இடம்பெயர்ந்து, பிரேசிலிய மாநிலமான எஸ்பிரிடோ சாண்டோவின் கடற்கரையை அடைகின்றன.

    ஒவ்வொரு ஆண்டும் இதனால் சில பெங்குயின்கள் இறப்பது இயல்பானதே. ஆனால், இவ்வளவு பெங்குயின்கள் இறப்பது மர்மாகவே உள்ளது என்றும் லீசாகோயன் கூறியுள்ளார்.

    இது எதனால் நடக்கிறது என்பது தெரியவில்லை என்றாலும், அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகிய காரணங்களால் தான் பெங்குயின்கள் உயிரிழக்கின்றன என்கிறார்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்
    பறவை காய்ச்சல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உலகம்

    உலக பிரியாணி தினம்: இந்தியாவின் பிரபலமான பிரியாணி வகைகள்  உணவு குறிப்புகள்
    தீடீரென பாகிஸ்தானிற்கு பயணம் செய்த சீன தொழிலதிபர் ஜாக் மா பாகிஸ்தான்
    உலகம் வெப்பமடைவதைக் குறைக்க, சூரியஒளியைத் தடுக்கும் வகையில் புதிய திட்டம் அமெரிக்கா
    ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை: தலிபான் உத்தரவு ஆப்கானிஸ்தான்

    உலக செய்திகள்

    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2 இந்தியா
    சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன் சீனா
    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொலை பஞ்சாப்

    பறவை காய்ச்சல்

    பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு பிரேசில்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025