NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மியான்மர்-பங்களாதேஷ் எல்லையில் ட்ரோன் தாக்குதல்; 150க்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மியான்மர்-பங்களாதேஷ் எல்லையில் ட்ரோன் தாக்குதல்; 150க்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் பலி
    ரோஹிங்கியா முஸ்லீம்கள்

    மியான்மர்-பங்களாதேஷ் எல்லையில் ட்ரோன் தாக்குதல்; 150க்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் பலி

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 11, 2024
    01:47 pm

    செய்தி முன்னோட்டம்

    மியான்மரின் மேற்குப் பகுதியில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற குழந்தைகள் உட்பட குறைந்தது 150 ரோஹிங்கியாக்கள் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அண்டை நாடான பங்களாதேஷிற்கு செல்வதற்காக எல்லையைக் கடக்க காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

    மேலும், மியான்மர் மற்றும் பங்களாதேஷ் இரண்டையும் பிரிக்கும் நாஃப் நதியில் தப்பியோடிய ரோஹிங்கியாக்களை ஏற்றிச் சென்ற படகும் மூழ்கியது.

    இந்த சமபவத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். மியான்மர் ராணுவத்திற்கும் கிளர்ச்சிப் போராளிகளுக்கும் இடையே சண்டை நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இருதரப்பும் எதிராணியினரை குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இனப்படுகொலை 

    மியான்மரில் இனப்படுகொலையால் வெளியேறும் ரோஹிங்கியாக்கள்

    மியான்மரில் உள்ள ரோஹிங்கியா முஸ்லீம் இனக்குழு மீது இனப்படுகொலை நோக்கத்துடன் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை காரணமாக, 2017ஆம் ஆண்டில் மட்டும் 7,30,000க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக ஐநா தெரிவித்துள்ளது.

    2021இல், இராணுவ ஆட்சி மியான்மரில் அதிகாரத்தைக் கைப்பற்றியது மற்றும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூ கியை பதவி நீக்கம் செய்தது. அன்று முதல் நாடு கொந்தளிப்பில் உள்ளது.

    இதைத் தொடர்ந்து பல ஆயுதமேந்தி போராடும் குழுக்களில் ஒன்றான அரக்கான் இராணுவம், முஸ்லீம்களின் அதிக மக்கள்தொகை கொண்ட வடக்கில் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளதால், ரோஹிங்கியாக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மியான்மர்
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மியான்மர்

    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்  மணிப்பூர்
    மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம் மணிப்பூர்
    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு  உலகம்
    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  இந்தியா

    உலக செய்திகள்

    தீடிரென்று ஒரு நபர் டெக்ஸாஸில் துப்பாக்கி சூடு நடத்தியதால் இருவர் பலி, பலர் காயம்  அமெரிக்கா
    2023ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களுக்காக 91.4 பில்லியன் டாலர் செலவழித்த உலக நாடுகள் உலகம்
    பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம் அமெரிக்கா
    ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது தாய்லாந்து  தாய்லாந்து

    உலகம்

    K-pop இசையை கேட்டதற்காக 22 வயது இளைஞரை தூக்கிலிட்டது வட கொரியா வட கொரியா
    ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை  ரஷ்யா
    மாணவர் விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியது ஆஸ்திரேலியா  ஆஸ்திரேலியா
    சிகாகோவைச் சேர்ந்த சுகாதார நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மோசடி: 2 இந்தியர்களுக்கு தண்டனை விதிப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025