Page Loader
அஸ்வின் ஓய்வு பெறுவதை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் நடுவே ஏன் அறிவித்தார்?
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவித்தார்

அஸ்வின் ஓய்வு பெறுவதை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் நடுவே ஏன் அறிவித்தார்?

எழுதியவர் Venkatalakshmi V
Dec 18, 2024
06:13 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ICC தரவரிசை பட்டியலில் உச்சத்தில் இருக்கும் ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரர் திடீர்ன்னு ஓய்வை அறிவித்ததன் பின்னணியில் உள்ள சாத்தியமான காரணிகளை பல கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த அறிவிப்பு அவரது சக வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சகோதரத்துவத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், அவர் ஏற்கனவே தனது முடிவை எடுத்துவிட்டார் என்று ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியது.

முடிவு

குடும்பத்தாரிடம் ஏற்கனவே அறிவித்த ஓய்வு முடிவு

தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கூற்றுப்படி, பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் தொடக்கப் போட்டிக்காக பெர்த்திற்கு விமானம் ஏறும் முன் அஷ்வின் இந்த முடிவை எடுக்கவில்லை. ஆனால் முழங்கால் காயத்துடன் நீண்ட காலம் போராடி வருவதால் விரைவில் ஓய்வை அறிவிப்பதாக அவர் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அவரது குடும்பத்தினரும் இந்த முடிவை பரிசீலிக்குமாறு அவரை வற்புறுத்தியுள்ளனர். இருப்பினும் அவர் ஆஸ்திரேலியாவில் தனது சுற்றுப்பயணத்திற்குப் பிறகு மட்டுமே அதை அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கவிருப்பதாக என்று அவர்களுக்கு அஸ்வின் தெரிவித்திருந்தார். அடிலெய்டு பிங்க் பால் டெஸ்டில் தோன்றிய பின்னர் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட அஷ்வின், டிசம்பர் 18 அன்று தனது ஓய்வை அறிவிப்பதாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக அறிக்கை மேலும் தெரிவித்தது.

சாத்தியமான காரணிகள்

சாத்தியமான காரணிகள் குறித்து விவாதிக்கும் கிரிக்கெட் உலகம்

கடந்த மாதம் பெர்த்தில் நடந்த போட்டியில், ஒரே சுழற்பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டதால், முதல் டெஸ்டில் அஷ்வின் மற்றும் ஜடேஜா தேர்வு செய்யப்படவில்லை. அதன் பின்னர் தற்போது நடைபெறவுள்ள மெல்போர்ன் மற்றும் சிட்னி போட்டியிலும் அவரது பெயர் விடுபட்டிருக்கக்கூடும் என்கிறது செய்திகள். அதனால் எமோஷனலாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கூடும் என்கிறார்கள் முன்னாள் வீரர்கள். இது அஸ்வினின் முடிவிற்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அஸ்வினின் சாதனை அபாரமானது. ஹோம் கிரௌண்டில் 21.44 சராசரியுடன் 537 விக்கெட்டுகளில் 383ஐ எடுத்துள்ளார். இருப்பினும், 2025 இல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இந்தியாவில் எந்த ஒரு சொந்த டெஸ்டும் திட்டமிடப்படாததால், அஸ்வின் தனது வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று நினைத்திருப்பார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post