NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கொலை செய்ய சதி நடப்பதாக குற்றச்சாட்டு; இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் டிஸ்மிஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொலை செய்ய சதி நடப்பதாக குற்றச்சாட்டு; இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் டிஸ்மிஸ்
    இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் டிஸ்மிஸ்

    கொலை செய்ய சதி நடப்பதாக குற்றச்சாட்டு; இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் டிஸ்மிஸ்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 27, 2023
    07:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க திங்கட்கிழமை (நவம்பர் 27) அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    கிரிக்கெட் வாரியத்தில் ஊழலை அகற்றுவதற்கான தனது நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக அவர் குற்றம் சாட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திங்கட்கிழமை வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக ரொஷான் ரணசிங்க, தான் கொல்லப்பட்டால் விக்ரமசிங்க அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக, கிரிக்கெட் வாரியத்தை சுத்தப்படுத்தும் தனது பணிக்காக தான் கொல்லப்படலாம் என்று அஞ்சுவதாக ரணசிங்க பாராளுமன்றத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

    Clash between Sports Minister and Srilankan President

    இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அமைச்சர் இடையே மோதல்

    இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அமைச்சர் இடையே மோதல் வெடித்தது.

    முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் ஒருநாள் உலகக்கோப்பையில் பெற்ற படுதோல்விக்காக கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை கூண்டோடு பதவி நீக்கம் செய்த ரணசிங்க, அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஐசிசி இந்த மாத தொடக்கத்தில் அரசின் தலையீடுகளால் இலங்கை கிரிக்கெட்கை தற்காலிகமாக தடை செய்தது.

    இதையடுத்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யுமாறு விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை ரணசிங்க நிராகரித்தார்.

    அதன் பின்னர் ரணசிங்க தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக குற்றம் சாட்ட, அவர் அமைச்சரவையில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    வர்த்தகப் போரில் திடீர் U-turn: அமெரிக்காவும் சீனாவும் வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன அமெரிக்கா
    கத்தாரில் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள 'பறக்கும் அரண்மனை' ஜெட் விமானத்தை வாங்கும் டிரம்ப் டொனால்ட் டிரம்ப்
    போர் பதற்றத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறந்தது இந்தியா விமான நிலையம்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    இலங்கை

    பிரதமர் மோடி- இலங்கை அதிபர்  சந்திப்பின் எதிரொலி: 15 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்த இலங்கை  இந்தியா
    இலங்கையிலும் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது UPI யுபிஐ
    இலங்கையிடமிருந்து கச்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி  இந்தியா
    சரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்  கடற்படை

    கிரிக்கெட்

    INDvsAUS Final : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    இந்தியா vs ஆஸ்திரேலியா: இன்றைய போட்டி சமநிலையில் முடிந்தால் என்னவாகும்? பவுண்டரி கணக்கு விதிமுறை அமலுக்கு வருமா? ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பையில் கேப்டனாக புதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    INDvsAUS Final : ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த விராட் கோலி விராட் கோலி

    கிரிக்கெட் செய்திகள்

    INDvsAUS Final : உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்காக சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ள இந்தியன் ரயில்வே ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsAUS Final : 'இறுதிப்போட்டிக்கு வந்ததே பெருசு'; மனம் திறந்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒருநாள் உலகக்கோப்பை
    ரூ.275 பள்ளிக்கட்டணத்தை கட்ட முடியாத நிலை; ரோஹித் ஷர்மாவின் பின் இப்படியொரு நெகிழ்ச்சி பிளாஷ்பேக்கா! ரோஹித் ஷர்மா
    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமனம் வங்கதேச கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025