ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் 2023 : நான்கு இந்திய வீரர்கள் காலிறுதிக்கு தகுதி
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் BWF சூப்பர் 500 போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இரண்டாவது சுற்றில் சக இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப்பை 21-14 21-10 என்ற கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து, காலிறுதியில் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்கொள்கிறார். இதற்கிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-10 21-17 என்ற கணக்கில் சீன தைபேயின் லி யாங்சூவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். மேலும், பிரணாய் எச்.எஸ். மற்றும் பிரியன்ஷு ரஜாவத்தும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இருப்பினும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் மிதுன் மஞ்சுநாத் மற்றும் கிரண் ஜார்ஜ், பெண்கள் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் புல்லேலா ஜோடி தோல்வியைத் தழுவினர்.