NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் முறைகேடு : 3வது இடத்தை பிடித்த வீராங்கனை தகுதி நீக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் முறைகேடு : 3வது இடத்தை பிடித்த வீராங்கனை தகுதி நீக்கம்
    மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் முறைகேடு செய்ததால் 3வது இடத்தை பிடித்த வீராங்கனை தகுதி நீக்கம்

    மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் முறைகேடு : 3வது இடத்தை பிடித்த வீராங்கனை தகுதி நீக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 19, 2023
    06:57 pm

    செய்தி முன்னோட்டம்

    ஸ்காட்லாந்தை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை ஜோசியா ஜக்ர்ஸெவ்ஸ்கி அல்ட்ரா மாரத்தானில் மூன்றாவது இடத்தைப் பிடித்த நிலையில், அவர் ஓட்டப் பாதையின் ஒரு பகுதிக்கு வாகனத்தைப் பயன்படுத்தியதாக தரவு காட்டியதை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ஏப்ரல் 7 ஆம் தேதி ஜிபி அல்ட்ராஸ் மான்செஸ்டர் முதல் லிவர்பூல் வரையிலான 80 கிமீ தூரத்திற்கு அல்ட்ரா மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது.

    இதில் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஸ்காட்லாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜோசியா ஜக்ர்ஸெவ்ஸ்கி, பந்தயத்தின் 4 கிமீ நீளத்திற்கு காரைப் பயன்படுத்தியதாக பந்தய கண்காணிப்பு அமைப்பின் தரவுகள் தெரிவித்தது.

    player apologies for fraud

    மோசடி குறித்து பந்தய இயக்குனர் வெய்ன் டிரிங்க்வாட்டர் கருத்து 

    பந்தய இயக்குனர் வெய்ன் டிரிங்க்வாட்டர், "நிகழ்வின் ஒரு பகுதியின் போது ஒரு ஓட்டப்பந்தய வீரர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.

    எங்கள் ரேஸ் டிராக்கிங் சிஸ்டம், ஜிபிஎஸ் தரவு, எங்கள் நிகழ்வுக் குழு, மற்ற போட்டியாளர்கள் மற்றும் பங்கேற்பாளரிடமிருந்து வழங்கப்பட்ட அறிக்கைகள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்த பின்னர், ஒரு ஓட்டப்பந்தய வீரர் வாகனத்தை பயன்படுத்தியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து ஜக்ர்ஸெவ்ஸ்கி பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.

    எனினும் அவர் தனது தவறுக்கு போட்டி ஏற்பாட்டாளர்களிடம் மன்னிப்பு கூறியதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்

    சமீபத்திய

    தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல் பொறியியல்
    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் பாகிஸ்தான்
    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்

    உலகம்

    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்
    ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரருக்கு 2 ஆண்டுகள் தடை விளையாட்டு
    மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து விலகுவதாக ரஃபேல் நடால் அறிவிப்பு விளையாட்டு
    உலகில் ஆறில் ஒருவரை பாதிக்கும் மலட்டுத்தன்மை: உலக சுகாதார மையம் அறிக்கை உலக சுகாதார நிறுவனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025