Page Loader
இரண்டாவது குழந்தை குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் ரோஹித் ஷர்மா
இரண்டாவது குழந்தை; இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் ரோஹித் ஷர்மா

இரண்டாவது குழந்தை குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் ரோஹித் ஷர்மா

எழுதியவர் Sekar Chinnappan
Nov 16, 2024
04:39 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அவரது மனைவி ரித்திகா சஜ்தேவும் நவம்பர் 15, 2024 அன்று தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததாக மகிழ்ச்சியுடன் அறிவித்தனர். இன்ஸ்டாகிராமில் இதை பகிர்ந்து கொண்ட ரோஹித் ஷர்மா, ஒரு புகைப்படத்துடன் "தி ஃபேமிலி, நாங்கள் நான்கு பேர் இருக்கும் இடம்." எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த தம்பதியரின் முதல் குழந்தையான மகள் சமைரா, 2018 இல் பிறந்தார். இதற்கிடையில், இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவி நடிகை அதியா ஷெட்டியும் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறோம் என்று அறிவித்தனர். இன்ஸ்டாகிராமில் தங்கள் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட தம்பதியினர், "எங்கள் அழகான ஆசீர்வாதம் விரைவில் வரும். 2025" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்

பார்டர் கவாஸ்கர் டிராபி

பெர்த்தில் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா இடம் பெறுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. அவர் இல்லாத நிலையில், அணியை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதல் போட்டி பெர்த்தில் நடக்கும் நிலையில், இரண்டாவது போட்டி அடிலெய்டில் (டிசம்பர் 6-10) பிங்க்-பால் பகல்-இரவு ஆட்டமாக நடக்க உள்ளது. பின்னர் பிரிஸ்பேனில் (டிசம்பர் 14-18) மூன்றாவது போட்டியும், மெல்போர்னில் (டிசம்பர் 26-30) பாக்சிங் டே டெஸ்ட் போட்டியும், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (ஜனவரி 3-7) இறுதி டெஸ்ட் போட்டியும் நடக்க உள்ளது.