குஜராத்தை விட சென்னையில் கல்வியறிவு அதிகம், மக்கள் பண்பானவர்கள்; ரவீந்திர ஜடேஜா புகழாரம்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, சென்னையையும் குஜராத்தையும் ஒப்பிட்டு, சென்னை மக்களை புகழ்ந்து பேசியுள்ளார்.
சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஜடேஜா சென்னை மக்களின் கல்வி, பணிவு மற்றும் அசைக்க முடியாத ஆதரவைப் பாராட்டினார்.
மேலும், "நான் சென்னைக்கு வந்தபோது, இங்குள்ள மக்கள் எவ்வளவு நன்கு படித்தவர்கள் என்பதை உணர்ந்தேன். அவர்களுடன் ஒப்பிடும்போது, குஜராத்தில் கல்வி விழிப்புணர்வு சற்று குறைவாகவே உள்ளது.
சென்னையைப் பற்றி நான் மிகவும் விரும்புவது அவர்களின் பணிவான இயல்பு, நாம் வென்றாலும் தோற்றாலும் அவர்களின் அன்பு மாறாது. மற்ற மாநிலங்களில் அது எப்போதும் அப்படி கிடையாது." எனக் கூறினார்.
சிஎஸ்கே
ஐபிஎல் 2025இல் சிஎஸ்கேவின் படுதோல்வி
ரவீந்திர ஜடேஜாவின் கருத்துக்கள், குறிப்பாக தற்போதைய ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவின் மோசமான செயல்திறன், 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றதன் பின்னனியில் கவனம் ஈர்த்துள்ளது.
மோசமான முடிவுகள் இருந்தபோதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அணியையும் வீரர்களையும் விட்டுக் கொடுக்காமல் இருந்தனர்.
இதற்கிடையே, ஜடேஜாவின் கருத்துக்கள், குஜராத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டதால் விமர்சனங்களைத் தூண்டியுள்ளன.
சிலர் அவரது கருத்துக்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர்.
குறிப்பாக அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது அவர் எதிர்கொண்ட பின்னடைவு, அந்த போட்டியில் அவர் 22 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து, உள்ளூர் விமர்சகர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Update | “சென்னை மக்கள் நன்கு படித்தவர்கள்..” - சிஎஸ்கே வீரர் ஜடேஜா புகழாரம்#SunNews | #CSK | #Jadeja | #ChennaiLove pic.twitter.com/lKgY2yXfDK
— Sun News (@sunnewstamil) May 30, 2025