NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் ஒத்திவைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் ஒத்திவைப்பு
    ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் ஒத்திவைப்பு

    ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் ஒத்திவைப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 01, 2023
    07:43 pm

    செய்தி முன்னோட்டம்

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 10க்கான வீரர்கள் ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    புரோ கபடி லீக்கின் ஏற்பாட்டாளர்களான மஷால் ஸ்போர்ட்ஸ், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு வீரர்கள் தயாராகி வருவதால், அமெச்சூர் கபடி கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையின் பேரில் ஏலத்தை ஒத்திவைப்பதாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) அறிவித்தது.

    முன்னதாக புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய கபடிக்கு இது ஒரு முக்கியமான நிகழ்வு என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக மஷால் ஸ்போர்ட்ஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

    new aution date to be announced soon

    புதிய வீரர்கள் ஏலம் எப்போது?

    ஆசிய விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஏலத்தை நடத்துவதற்கான புதிய தேதி உடனடியாக அறிவிக்கப்படவில்லை.

    இது குறித்து மஷால் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடரில் பங்கேற்கும் 12 அணிகள் மற்றும் இந்த கபடி போட்டியின் ஒளிபரப்பு உரிமையை வைத்துள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் கலந்தாலோசித்து புதிய ஏல தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, சீசன் 10க்காக மொத்தம் 84 வீரர்கள் 12 அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புரோ கபடி லீக்
    கபடி போட்டி
    ஆசிய விளையாட்டுப் போட்டி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    புரோ கபடி லீக்

    புரோ கபடி லீக் சீசன் 10க்கான வீரர்கள் ஏல தேதி அறிவிப்பு கபடி போட்டி
    டிசம்பர் 2 முதல் தொடங்குகிறது பத்தாவது புரோ கபடி லீக் கபடி போட்டி

    கபடி போட்டி

    ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி முதல் நாள் போட்டிகளில் அபார வெற்றி ஆசிய சாம்பியன்ஷிப்
    ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி ஆசிய சாம்பியன்ஷிப்
    ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் எட்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்தியா இந்திய கபடி அணி
    "கோ-கோ பாதி, கபடி பாதி" : இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு அட்யா பட்யா பற்றி தெரியுமா? இந்தியா

    ஆசிய விளையாட்டுப் போட்டி

    ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிப்பு டென்னிஸ்
    ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய படகோட்டி அணி அறிவிப்பு இந்திய அணி
    ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிகள் பங்கேற்க பிசிசிஐ ஒப்புதல் இந்திய கிரிக்கெட் அணி
    ஆசிய போட்டிகளுக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு டேபிள் டென்னிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025