ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 : இந்திய பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) தகுதி பெற்றார். ரஜாவத் 44 நிமிட கால் இறுதியில் சீன-தைபேயின் யு ஜென் சியை 21-18, 21-18 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சனிக்கிழமை (ஏப்ரல் 8) மதியம் 1.30 மணிக்கு நடக்க உள்ள அரையிறுதிப் போட்டியில் பிரியன்ஷு ரஜாவத் அயர்லாந்தின் என் நுயனை எதிர்கொள்கிறார். பின்னர் வெள்ளிக்கிழமை, ஏழாவது தரவரிசையில் உள்ள எம்.ஆர்.அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா ஆண்கள் இரட்டையர் பிரிவு கால்இறுதியில் இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னாண்டோ மற்றும் டேனியல் மார்ட்டின் ஜோடியை எதிர்கொள்கிறார்கள்.