'ஒரே அசிங்கமா போச்சு குமாரு' ; வங்கதேச அணியின் தோல்வியால் தன்னைத்தானே ஷூவால் அடித்துக் கொண்ட ரசிகர்
சனிக்கிழமை (அக்டோபர் 28) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்தது. இந்த முடிவால் மைதானத்தில் போட்டியை நேரில் பார்க்க வந்திருந்த ஒரு ரசிகர் விரக்தியின் உச்சத்திற்கே சென்று, தன்னைத்தானே ஷூவால் அடித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் மேலும் பல வங்கதேச ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்து அந்த ரசிகர்கள் கூறுகையில், வங்கதேச அணி பெரிய அணிகளிடம் தோற்றிருந்தால் கூட சரி என கடந்து போகலாம், ஆனால் நெதர்லாந்திடம் தோற்றதை தங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை என தெரிவித்தனர்.