'இந்தியாவின் 1983 உலகக்கோப்பை வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டமே' : முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்டி ராபர்ட்ஸ்
முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டி ராபர்ட்ஸ், 1983 இல் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றதற்கு அதிர்ஷ்டம் தான் காரணம் என்று கருதுவதாக தெரிவித்துள்ளார். நவீன வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சின் தந்தையாகக் கருதப்படும் ராபர்ட்ஸ், 1975 மற்றும் 1979 இல் இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற ஒருநாள் அணியில் இடம் பெற்றார். இருப்பினும், ராபர்ட்ஸ் இடம் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1983 இல் பட்டத்தை தக்கவைக்க தவறியதோடு, அப்போது கத்துக்குட்டியாக கருதப்பட்ட இந்திய அணியிடம் இறுதிப் போட்டியில் தோற்றது. 1983 இல் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் கபில்தேவ் தலைமையிலான அணி வெஸ்ட் இன்டீஸை ஒருமுறை அல்ல, இரண்டு முறை தோற்கடித்தது.
இந்திய அணியிடம் தோற்றது குறித்து ஆண்டி ராபர்ட்ஸ் பேச்சு
இருமுறை இந்தியாவிடம் வீழ்ந்தாலும், இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் தன்னை ஈர்க்கவில்லை என்று ராபர்ட்ஸ் கூறினார். இதுகுறித்து பேசிய ஆண்டி ராபர்ட்ஸ், "நாங்கள் ஃபார்மில் இருந்தோம், ஆனால் மோசமான ஆட்டம் காரணமாக இருந்தது. இது 1983-ல் இந்தியாவின் அதிர்ஷ்டம். எங்களிடம் இருந்த அந்த சிறந்த அணியால், நாங்கள் 1983-ல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தோம். பின்னர், ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் இந்தியாவை 6-0 என்ற கணக்கில் தோற்கடித்தோம். அதனால், அது தான் ஆட்டம்." என்றார். மேலும், "1983 இறுதிப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களில், நான் குறிப்பாக யாராலும் ஈர்க்கப்படவில்லை. யாரும் அரைசதம் அடிக்கவில்லை. பந்துவீச்சாளர்களில், யாரும் 5 அல்லது 4 விக்கெட் கூட பெறவில்லை." என்றார்.