NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / நேரு டிராபி படகுப்போட்டியில் நான்காவது முறையாக வீயபுரம் சுண்டனில் அணி வெற்றி
    அடுத்த செய்திக் கட்டுரை
    நேரு டிராபி படகுப்போட்டியில் நான்காவது முறையாக வீயபுரம் சுண்டனில் அணி வெற்றி
    நேரு டிராபி படகுப்போட்டியில் நான்காவது முறையாக வீயபுரம் சுண்டனில் அணி வெற்றி

    நேரு டிராபி படகுப்போட்டியில் நான்காவது முறையாக வீயபுரம் சுண்டனில் அணி வெற்றி

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 13, 2023
    01:05 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவின் ஆலப்புழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 69வது நேரு டிராபி படகுப் போட்டி சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற்றது.

    இதில் பள்ளத்துருத்தி படகு குழாமின் வீயபுரம் சுண்டனில் (பாம்பு படகு) அணி வெற்றி பெற்றது.

    நேரு டிராபி படகுப் போட்டியில் அவர்கள் பெறும் நான்காவது தொடர் வெற்றி இதுவாகும்.

    முன்னதாக, பாம்புப் படகுப் போட்டியின் இறுதிப் போட்டியில் யுபிசி கைனகரியின் நடுபாகம் சுண்டன், குமரகம் படகுக் கழகத்தின் சம்பக்குளம் சுண்டன் மற்றும் காவல்துறை படகுக் கழகத்தின் மகாதேவிக்காடு காட்டில் தெக்கேதில் சுண்டன் ஆகிய நான்கு அணிகள் மோதின.

    இந்த போட்டி ஆலப்புழாவின் புகழ்பெற்ற புன்னமடை ஏரியில் நடைபெற்றது.

    nehru trophy boat race background

    நேரு டிராபி படகுப் போட்டியின் வரலாறு

    1952 ஆம் ஆண்டு கேரளாவிற்கு முதன்முறையாக சென்ற இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவாக இந்த பந்தயம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று நடைபெறுகிறது.

    அவரது முதல் பயணத்தின்போது, ஆலப்புழா மக்களால் அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது மற்றும் அவருக்கு பரிசு வழங்கப்பட்டது.

    மேலும் அவரது வருகையை முன்னிட்டு நடைபெற்ற பாம்பு படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி நேரு ஒரு வெள்ளிக் கோப்பையை வழங்கினார். அதன் பின்னர், இது நேரு கோப்பையாகவே மாறிவிட்டது.

    இந்த போட்டியில் பல்வேறு பிரிவுகளில் படகுப் போட்டிநடத்தப்பட்டாலும், 100 அடிக்கு மேல் நீளம் கொண்ட சுந்தன் வல்லம் எனும் பாம்பு படகுகள் தான் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    இந்தியா

    சமீபத்திய

    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்
    தாங்கள் உருவாக்கிய அதே AI அமைப்புகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் மைக்ரோசாஃப்ட்
    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்

    கேரளா

    பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு இந்தியா
    கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி  இந்தியா
    திரைப்படமாக தயாராகும் 'அரிசி கொம்பன்' ஆண் யானையின் கதை - பர்ஸ்ட் லுக் போஸ்டர்  திரைப்பட துவக்கம்
    வெளிநாடுகளுக்கு சென்ற குடும்பங்கள் - ஆளில்லாமல் காலியாக கிடக்கும் விலையுர்ந்த பங்களாக்கள் இந்தியா

    இந்தியா

    இந்தியப் பெருங்கடலுக்குள் வந்த சீனப் போர்க்கப்பல்கள்: என்ன நடக்கிறது? உலகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 7 தங்கம் வெள்ளி விலை
    ஆப்பிரிக்க சிறுத்தைகள் விவகாரம்: மத்திய அரசுக்கு சாதகமாக பதிலளித்தது உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 54 பேருக்கு பாதிப்பு  கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025