NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்!
    ஜோத்பூரில் ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டம்

    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 31, 2023
    02:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனுக்கான புதிய இடமாக ஜோத்பூரின் பர்கத்துல்லா கான் ஸ்டேடியம் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் (ஆர்சிஏ) உயர் அதிகாரிகள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) சில ஐபிஎல் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

    ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியம் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸின் தாயகமாகும். மேலும் வரவிருக்கும் சீசன் மீண்டும் சொந்த மற்றும் வெளியூர் வடிவத்தில் விளையாடப்படுவதால், ஆர்சிஏ புதிய மைதானத்தில் சில விளையாட்டுகளை நடத்த விரும்புகிறது.

    எனினும், மைதானத்தை மதிப்பிடுவதற்கு ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்து, அதன் அடிப்படையிலேயே ஜோத்பூரில் போட்டிகளை நடத்தலாமா வேண்டாமா என்று பிசிசிஐ முடிவுசெய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    ஐபிஎல் 2023

    ஜோத்பூரில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சாத்தியமா?

    ஐபிஎல் போட்டியை நடத்த, ஒவ்வொரு மைதானத்திலும் சில அடிப்படை வசதிகளை மாநில கிரிக்கெட் சங்கம் செய்ய வேண்டும்.

    சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, சமீபத்தில் இந்த மைதானத்தில் ரஞ்சி டிராபி போட்டி சத்தீஸ்கர் மற்றும் சர்வீசஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

    இந்த மைதானம் 30,000 பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்டது மற்றும் கடந்த ஆண்டு லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டுக்கான இடமாக இது இருந்தது.

    லெஜண்ட்ஸ் லீக் போட்டிகள் விளக்குகளின் கீழ் விளையாடப்பட்டது. இதனால் பிசிசிஐ நடத்தும் போட்டிகளை இங்கு விளையாட முடியும் என்று ஆர்சிஏ நம்புகிறது.

    இருப்பினும், ஜோத்பூர் மைதானத்தை பொறுத்தவரை பிசிசிஐயின் முக்கிய கவலை பவுண்டரி அளவு ஆகும். இது தேவையான தூரத்திற்கு அமைக்கப்படவில்லை என்று பிசிசிஐ தரப்பில் நினைக்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2023
    ஐபிஎல்
    ராஜஸ்தான்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஐபிஎல் 2023

    மகளிர் ஐபிஎல் 2023 : ஏலத்தில் குதித்துள்ள டாப் நிறுவனங்கள்! ஐபிஎல்

    ஐபிஎல்

    மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் முடிந்தது! ஐந்து அணிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ! கிரிக்கெட்

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025