IPL 2024 : குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்
ஐபிஎல் 2024 சீசனுக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஐபிஎல் சீசனில் அறிமுகமாகி, தனது முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிகாரப்பூர்வமாக வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஷுப்மன் கில் லிமிட்டெட் குஜராத் டைட்டன்ஸ் அணியின் டாப் ஆர்டரில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளார். தனது நியமனம் குறித்து பேசிய கில், "குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். இதுபோன்ற சிறந்த அணியை வழிநடத்த என் மீது நம்பிக்கை வைத்ததற்காக உரிமையாளருக்கு நன்றி." என்று கூறினார்.
ஷுப்மன் கில் கேப்டனாக நியமனம்
ஹர்திக் பாண்டியாவை விடுவித்தது ஏன்?
அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி தக்கவைத்திருந்தது. இதனால் அவர் தனது முன்னாள் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்வாரா என்பது கேள்விக்குறியான நிலையில், திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக மும்பைக்கு இடம் பெயர்த்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ரோஹித் ஷர்மா 37 வயதாவதாலும், தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத சூழலில், அணியின் வருங்கால கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை வளர்த்தெடுக்கவே இந்த மாற்றம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.