NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி
    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி

    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 26, 2023
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஹாக்கி அணிகள் ஆதிக்கம் செலுத்திய காலம் முதல், கிரிக்கெட் வரை எப்போதும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே ரசிகர்களிடையே அதிக ஆர்வம் தொற்றிக் கொள்ளும்.

    இந்த ஆர்வம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளன.

    ஆனால், தனிநபர் போட்டிகளில் புகழ்பெற்ற மில்கா சிங்குக்கும் பாகிஸ்தானின் பழம்பெரும் ஓட்டப்பந்தய வீரர் அப்துல் காலிக்கும் இடையிலான மோதலுக்கு பிறகு, அதுபோன்ற ஒரு சூழல் எழாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில், நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் மூலம் அத்தகைய ஒரு மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

    இதற்கு காரணம் ஹங்கேரியில் நடந்துவரும் தடகள உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    javelin throw final neeraj faces challenge with pakistan player

    நீரஜ் சோப்ரா vs அர்ஷத் நதீம்

    ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) ஹங்கேரியில் நடைபெறும் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் அர்ஷத் நதீம் ஆகியோர் அதிக கவனத்தை பெற்றுள்ளார்கள்.

    முன்னதாக, தகுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.77 மீ தூரம் வீசி முதலிடம் பிடித்தார். அதே நேரத்தில் அர்ஷத் நதீம் 86.79 மீ வீசி இரண்டாவது இடம் பிடித்தார்.

    இதன் மூலம் இருவரும் நேரடியாக 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.

    இதுவரை ஒருமுறை கூட நீரஜை களத்தில் அர்ஷத் நதீம் தோற்கடிக்க முடியவில்லை என்றாலும், தற்போதைய சூழலில் நீரஜ் சோப்ராவுக்கு அவர் கடும் போட்டியைக் கொடுப்பார் என்பதால் இறுதிப்போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக சாம்பியன்ஷிப்
    இந்தியா
    பாகிஸ்தான்
    நீரஜ் சோப்ரா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உலக சாம்பியன்ஷிப்

    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தங்கம் வில்வித்தை
    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வில்வித்தை
    சென்னையில் நடந்த பைக் ரேஸில் விபத்து; 13 வயது வீரர் ஷ்ரேயாஸ் ஹரீஷ் மரணம் சென்னை
    யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக் மல்யுத்தம்

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா
    இந்தியாவின் மிக வயதான யானை உயிரிழப்பு அசாம்
    சந்திரயான் 3: நிலவில் தரையிறங்கும் அந்த இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும்? சந்திரயான் 3
    நண்பனின் 14 வயது மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த கொடூரன்  பலாத்காரம்

    பாகிஸ்தான்

    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  இந்தியா
    பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுதலை  இந்தியா
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2 இந்தியா

    நீரஜ் சோப்ரா

    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி உலக சாம்பியன்ஷிப்
    நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025