Page Loader
உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம்; 2024 ஒலிம்பிக்கிற்கு இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் தகுதி
2024 ஒலிம்பிக்கிற்கு இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் அகில் ஷியோரன் தகுதி

உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம்; 2024 ஒலிம்பிக்கிற்கு இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் தகுதி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 21, 2023
06:18 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சுடும் வீரர் அகில் ஷியோரன் ஆடவர் 50மீ வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் ஷ்மிர்ல் தங்கப் பதக்கத்தையும், செக் குடியரசின் பீட்டர் நிம்பர்ஸ்கி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். முன்னதாக தகுதிச் சுற்றின் போது, அகில் 585 மதிப்பெண்களுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தார் மற்றும் இதன்மூலம் எட்டு பேர் கொண்ட இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதர இந்திய வீரர்களான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், நீரஜ் தகுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவி வெளியேறினர். இதற்கிடையே, இந்த போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம், அகில் ஷியோரன் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post