NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மாநில முதல்வரின் உதவியாளர் எனக் கூறி பணமோசடி : சிக்கிய முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாநில முதல்வரின் உதவியாளர் எனக் கூறி பணமோசடி : சிக்கிய முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர்
    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உதவியாளர் எனக் கூறி முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் பணமோசடி

    மாநில முதல்வரின் உதவியாளர் எனக் கூறி பணமோசடி : சிக்கிய முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 15, 2023
    12:44 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரப் பிரதேசத்தில் ரஞ்சி கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நாகராஜு புடுமுறு என்பவர் சிட்டி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உதவியாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து 60 நிறுவனங்களிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புடுமுறு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பரில், சிட்டி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஊழியரை தொடர்பு கொண்ட புடுமுறு, தன்னை முதல்வரின் உதவியாளராகக் காட்டிக்கொண்டு, மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரிக்கி புய்க்கு ஸ்பான்ஸர்ஷிப் செய்யுமாறு கேட்டார்.

    மேலும் நிறுவனத்தை நம்பவைக்க தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் தனது அடையாளம் மற்றும் தொடர்புக்கான ஆதாரமாக போலி ஆவணங்களை அவர்களுக்கு மின்னஞ்சல் செய்தார்.

    பணமோசடி

    மோசடி கிரிக்கெட் வீரர் சிக்கியது எப்படி?

    புடுமுறுவின் ஆவணங்களை பார்த்து நம்பிய சிட்டி எலக்ட்ரானிக்ஸ் ரூ.12 லட்சத்தை அவருக்கு மாற்றிய நிலையில், கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    வழக்கை கையிலெடுத்த சைபர் கிரைம் போலீசார், பணம் கடைசியில் புடுமுறுவுக்கு சென்றதை காட்டியது.

    இதையடுத்து இந்த வார தொடக்கத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள யாவரிபெட்டா என்ற அவரது சொந்த ஊரில் வைத்து புடுமுறு கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து 7.6 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டுள்ளனர்.

    2018ல் தனது செயல்திறனை இழந்து அணியிலிருந்து நீக்கப்பட்டதால், தனது ஆடம்பர வாழ்க்கை முறையை தொடர, இதுபோல் மோசடிகளை தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கிரிக்கெட்

    "இதெல்லாம் தவறான செயல்" : ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீது சுனில் கவாஸ்கர் அதிருப்தி டெஸ்ட் கிரிக்கெட்
    சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேண்ட்? தமிழ்நாடு
    இதே நாளில் அன்று : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா உலக கிரிக்கெட் சாம்பியன் பட்டம் வென்ற தினம் விளையாட்டு
    INDvsAUS நான்காவது டெஸ்ட் : சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார் கேமரூன் கிரீன் டெஸ்ட் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025