Page Loader
16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டி ஒத்தி வைக்கப்பட்டது இது தான் முதல் முறை!
16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டி ஒத்தி வைக்கப்பட்டது இது தான் முதல் முறை

16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டி ஒத்தி வைக்கப்பட்டது இது தான் முதல் முறை!

எழுதியவர் Sekar Chinnappan
May 29, 2023
11:04 am

செய்தி முன்னோட்டம்

2008 இல் ஐபிஎல் தொடங்கியது முதல் 16 சீசன்களில் முதன்முறையாக, ஐபிஎல் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (மே 28) அகமதாபாத்தில் இடைவிடாமல் பெய்த மழையால் ரிசர்வ் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அகமதாபாத் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இவ்வளவு மழை பெய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மாலை 6:30 மணியளவில் தொடங்கிய மழை சிறிது நேரம் நின்றதால் இரவு 9 மணியளவில் மைதான ஊழியர்கள் அவுட்ஃபீல்டை தயார் செய்ய முழு வீச்சில் செயல்பட்டு வந்தனர். இதனால் போட்டி தொடங்கிவிடும் என ரசிகர்கள் உற்சாகமடைந்து "தோனி, தோனி" என கோஷமிட்ட நிலையில், மீண்டும் மழை திரும்பியது.

bcci postpones ipl 2023 final

போட்டியை ரிசர்வ் நாளுக்கு ஒத்திவைக்க முடிவு

மழை நின்றால் கடைசியாக 12.05 க்கு இரு தரப்பிலும் ஐந்து ஓவர்கள் கொண்ட ஆட்டம் தொடங்க வாய்ப்பிருந்தது. ஆனால் மழை விடாமல் பெய்து வந்ததால் மூத்த பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அதிகாரிகள் ஐந்து ஓவர்கள் கொண்ட போட்டியின் மூலம் இதுபோன்ற தரமான போட்டியை முடிவு செய்வதில் அர்த்தமில்லை என நினைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடைசியில் 10.54 மணிக்கு போட்டி திங்கட்கிழமைக்கு (மே 29) ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை போட்டிக்கு எடுத்துள்ள டிக்கெட்டை காட்டி ரசிகர்கள் இந்த போட்டியை நேரடியாக கண்டு களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திங்கட்கிழமையை பொறுத்தவரை மழைக்கான வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.