வரலாற்றுச் சாதனை: 58 ஆண்டுகால சாதனையை முறியடித்து தேவ்தத் படிக்கல் புதிய மைல்கல்
செய்தி முன்னோட்டம்
இலங்கையின் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்டர் தேவ்தத் படிக்கல் தனது அறிமுக டெஸ்ட் சதத்தைப் பிரம்மாண்டமான டாடி ஹன்ட்ரட் ஆக மாற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார். காயம் காரணமாக விலகிய சாய் சுதர்சனுக்குப் பதிலாகக் களமிறங்கிய 26 வயதான படிக்கல், 230 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 167 ரன்கள் குவித்து அசத்தினார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
58 ஆண்டு சாதனை
58 ஆண்டுகால அஜித் வடேக்கரின் சாதனை முறியடிப்பு
வெளிநாட்டு மண்ணில் 3வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த இடதுகை இந்திய பேட்டர் என்ற 58 ஆண்டுகால வரலாற்று சாதனையை தேவ்தத் படிக்கல் முறியடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக 1968 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் அஜித் வடேக்கர் அடித்த 143 ரன்களே சாதனையாக இருந்தது.
சவுரவ் கங்குலி மற்றும் வினோத் காம்ப்ளி ஆகியோரை முந்தி படிக்கல் இந்த வரலாற்றுப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
புஜாரா
புஜாராவின் சாதனையை முறியடித்த இளம் இந்திய வீரர்
இலங்கை மண்ணில் 150க்கும் அதிகமான ரன்களைக் குவித்த மிக இளம் இந்திய வீரர் என்ற செதேஷ்வர் புஜாராவின் சாதனையை தேவ்தத் படிக்கல் முறியடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், ஷிகர் தவான் மற்றும் புஜாரா ஆகியோருக்குப் பிறகு இலங்கை மண்ணில் 150+ ரன்கள் எடுத்த 5வது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
மேலும், இலங்கையில் 3வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச தனிநபர் ரன் குவித்த இந்திய பேட்டர் என்ற சாதனையும் படிக்கலையே சாரும்.
சுதந்திர தினம்
சுதந்திர தினத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரர்
போட்டியின் முதல் நாளான ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சதம் அடித்த தேவ்தத் படிக்கல், சர்வதேசக் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய சுதந்திர தினத்தன்று சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான வரலாற்று சாதனையைப் படைத்தார்.
இந்திய அணிக்கு தனது 3வது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடும் படிக்கல், கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தித் தனது திறமையை சர்வதேச அளவில் நிரூபித்துள்ளார்.
இலங்கை
இலங்கை மண்ணில் இடதுகை பேட்டர்களின் சாதனைப் பட்டியல்
இலங்கை மண்ணில் இடதுகை இந்திய பேட்டர் ஒருவர் எடுத்த 2வது அதிகபட்ச தனிநபர் ரன் (167) என்ற பெருமையை படிக்கல் பெற்றுள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஷிகர் தவான் காலி மைதானத்தில் அடித்த 190 ரன்களே முதலிடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் பல சாதனைகளை ஒரே இன்னிங்ஸில் முறியடித்துள்ள தேவ்தத் படிக்கலின் இந்த பிரம்மாண்ட ஆட்டம், இந்திய அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.