NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் : முதல் நாளில் 7 தங்கத்தை கைப்பற்றியது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் : முதல் நாளில் 7 தங்கத்தை கைப்பற்றியது இந்தியா
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் 7 தங்கத்தை கைப்பற்றியது இந்தியா

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் : முதல் நாளில் 7 தங்கத்தை கைப்பற்றியது இந்தியா

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 12, 2023
    04:43 pm

    செய்தி முன்னோட்டம்

    நொய்டாவில் நடந்து வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில், இந்தியா 7 தங்கம் மற்றும் ஒரு வெள்ளியை வென்றுள்ளது.

    இந்திய வீராங்கனை ஜ்யோத்ஸ்னா சபர், 40 கிலோ இளையோர் பிரிவில், மொத்தம் 116 எடையை தூக்கி தங்கம் வென்றார்.

    இதேபோல், அஸ்மிதா, 45 கிலோ இளையோர் & ஜூனியர் பிரிவில், மொத்தம் 136 கிலோ எடையை தூக்கி, இரண்டு தங்கம் வென்ற நிலையில், கோமல் கோஹர் 45 கிலோ சீனியர் பிரிவில் மொத்தம் 144 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார்.

    49 கிலோ இளையோர் பிரிவில், கோயல் பார், மொத்தம் 152 கிலோ எடையைத் தூக்கி முதலிடத்தைப் பிடித்தார்.

    commonwealth weightlifting championships 2023

    இந்தியாவில் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி

    ஞானேஸ்வரி யாதவ், 49 கிலோ ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் 2 தங்கங்களை கைப்பற்றிய நிலையில், ஜில்லி தலபெஹெரா, 49 கிலோ சீனியர் பிரிவில் வெள்ளி வென்றார்.

    காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி, கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுதம் புத் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

    ஐந்து நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், 52 இந்தியர்கள் உட்பட 253 பளுதூக்குபவர்கள் சீனியர், ஜூனியர் மற்றும் இளையோர் பிரிவுகளில் போட்டியிடுகின்றனர்.

    இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள மதிப்புமிக்க AWF ஆசிய ஜூனியர் மற்றும் இளைஞர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பிற்கான சோதனை ஓட்டமாகவும் இந்தப் போட்டிகள் நடக்கின்றன.

    மேலும், 2015ஆம் ஆண்டு புனேயில் வெற்றிகரமாக காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியை நடத்திய இந்தியா, அதன் பிறகு இரண்டாவது முறையாக இப்போட்டியை நடத்துகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய அணி

    சமீபத்திய

    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்
    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை
    பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா  பஹல்காம்
    வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை! சரும பராமரிப்பு

    இந்திய அணி

    ஏழாவது இடம்! உலக தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்! பேட்மிண்டன் செய்திகள்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய அணியின் மேலாளராக அனில் படேல் நியமனம் டெஸ்ட் மேட்ச்
    ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் குரூப் சி'யில் இடம் பெற்றுள்ள இந்திய கால்பந்து அணி! இந்தியா
    '18ஆம் எண்ணுடன் பிரபஞ்ச தொடர்பு' : ஜெர்சி நம்பர் குறித்து உருகிய விராட் கோலி! விராட் கோலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025