NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் : முதல் போட்டியிலேயே கேமரூன் கிரீன் ஆடுவார்! ஆஸி. பயிற்சியாளர் நம்பிக்கை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் : முதல் போட்டியிலேயே கேமரூன் கிரீன் ஆடுவார்! ஆஸி. பயிற்சியாளர் நம்பிக்கை!
    டெஸ்ட் தொடரின் கேமரூன் கிரீன் விளையாடுவார் என பயிற்சியாளர் நம்பிக்கை

    பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் : முதல் போட்டியிலேயே கேமரூன் கிரீன் ஆடுவார்! ஆஸி. பயிற்சியாளர் நம்பிக்கை!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 30, 2023
    06:42 pm

    செய்தி முன்னோட்டம்

    பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இன்னும் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டின் போது அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் தற்போது சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு, நாக்பூரில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் பங்கேற்க கிரீன் இன்னும் தகுதி பெறுவார் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

    கேமரூன் கிரீன்

    கேமரூன் கிரீனின் முக்கியத்துவம்

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம்பிடிக்க ஆஸ்திரேலியா முனைப்பாக உள்ள நிலையில், இந்தத் தொடரில் கிரீனின் பங்கு அவசியமாகிறது.

    மற்ற நாடுகளிடையே நடக்கும் டெஸ்ட் தொடர்களை நம்பியிராமல், எளிதாக நுழைய வேண்டுமானால் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது டிரா அல்லது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

    இந்நிலையில், கேமரூன் கிரீனின் ஆல்-ரவுண்ட் திறன், அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்பதால், அவரை உடல்தகுதி பெற வைத்து இந்தியாவுக்கு அனுப்புவதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.

    கிரீன் பந்துவீச்சில் சிறப்பாக இருந்தாலும், பயிற்சியாளர் மெக்டொனால்ட், கிரீன் ஒரு மிடில்-ஆர்டர் பேட்டராக அதிக மதிப்புடையவர் என்றும், அவரை பேட்டிங்கில் வைத்து மட்டுமே இறுதி லெவன் அணியை உருவாக்க முடியும் என்றும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் கிரிக்கெட்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    டெஸ்ட் கிரிக்கெட்

    ஐசிசி சிறந்த ஆடவர் டெஸ்ட் அணி 2022 : இந்தியர் வீரர்களில் ரிஷப் பந்த் மட்டும் இடம் பெற்றார்! ஐசிசி விருதுகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025