NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இனவெறிக்கு எதிராக பிரேசிலுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் ஸ்பெயின் கால்பந்து அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இனவெறிக்கு எதிராக பிரேசிலுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் ஸ்பெயின் கால்பந்து அணி
    இனவெறிக்கு எதிராக பிரேசிலுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் ஸ்பெயின் கால்பந்து அணி

    இனவெறிக்கு எதிராக பிரேசிலுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் ஸ்பெயின் கால்பந்து அணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 14, 2023
    10:21 am

    செய்தி முன்னோட்டம்

    ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியல்ஸ் இனவெறிக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பெர்னாபியூவில் ஸ்பெயினுக்கு எதிராக பிரேசில் நட்பு ஆட்டத்தில் விளையாடும் என்று செவ்வாயன்று (ஜூன் 13) அறிவித்தார்.

    ரியல் மாட்ரிட் அணியை சேர்ந்த வினிசியஸ் ஜூனியருக்கு ஆதரவாக, அவர் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட இனவெறி தாக்குதலுக்கு எதிராக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    வினிசியஸ் ஜூனியர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் எனும் நிலையில், ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ரூபியல்ஸ் மற்றும் பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் துணைத்தலைவர் எட்னால்டோ ரோட்ரிக்ஸ் ஒன்றாக சந்தித்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

    cbf deputy president presses strong action

    லா லிகா கால்பந்து தொடரில் தொடரும் இனவெறி தாக்குதல்

    கடந்த மே மாதம் வலென்சியாவில் நடந்த லா லிகா போட்டியின் போது 22 வயதான பிரேசிலின் வினிசியஸ் மீது இனவெறி அவமதிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து புகார் செய்யப்பட்டது.

    இந்த சீசனில் இனவெறி குறித்து வழக்கறிஞர்களிடம் புகாரளிக்கப்பட்ட பத்தாவது சம்பவம் இதுவாகும்.

    இனவெறி குறித்து பேசிய எட்னால்டோ ரோட்ரிக்ஸ், கால்பந்து அதிகாரிகள் இனவெறி வழக்குகளில் கடுமையான தண்டனையைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார்.

    மேலும், "அபராதம் மட்டும் போதாது. கிளப்புகளும் பொறுப்பேற்க வேண்டும். லீக் நிலைகளில் புள்ளிகளைக் கழித்தல், ஸ்டாண்டுகளை மூடுதல் அல்லது வாழ்நாள் முழுவதும் தடை விதித்தல் போன்ற கடுமையான தடைகளை இனவெறிக்கு எதிராக ஏற்றுக்கொண்ட முதல் கால்பந்து கூட்டமைப்பு பிரேசில் ஆகும்." எனத் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்
    பிரேசில்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    கால்பந்து

    அகராதியில் சேர்க்கப்பட்டது கால்பந்து ஜாம்பவான் பீலேவின் பெயர் கால்பந்து செய்திகள்
    லியோனல் மெஸ்ஸிக்கு விளையாட தடை விதித்தது பிஎஸ்ஜி கிளப் கால்பந்து செய்திகள்
    ஆண்டுக்கு 400 மில்லியன் யூரோ ஊதியம்! சவூதி கால்பந்து கிளப்பிற்கு இடம் பெயரும் லியோனல் மெஸ்ஸி? கால்பந்து செய்திகள்
    இண்டர்காண்டினென்டல் கோப்பை 2023 : 41 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்தியா கால்பந்து செய்திகள்

    கால்பந்து செய்திகள்

    75 ஆண்டுகளில் முதல் முறை : ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக நான்கு கோல் அடித்த வீரர் ரியல் மாட்ரிட்
    33 ஆண்டுகளுக்கு பிறகு சீரி ஏ லீக் பட்டத்தை வென்ற நபோலி கால்பந்து
    மன்னிப்பு கேட்டு மீண்டும் பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணியில் இணைந்த லியோனல் மெஸ்ஸி கால்பந்து
    செல்ஃபி எடுக்க முயன்ற எதிரணி ஊழியரை தள்ளிவிட்ட ரொனால்டோ! வைரலாகும் காணொளி! கால்பந்து

    பிரேசில்

    பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025