முன்னணி ஸ்பான்சருக்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ
பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சர் உரிமைகளைப் பெறுவதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, பைஜூஸ் நிறுவனம் முன்னணி ஸ்பான்சர் உரிமையை 35 மில்லியன் டாலருக்கு வைத்திருந்தது. இருப்பினும், கடந்த நிதியாண்டின் இறுதியில் பைஜூஸ் இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ புதன்கிழமை (ஜூன் 14) இரவு ஏலத்திற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. ஆர்வமுள்ள நிறுவனங்கள் ஏல விண்ணப்பங்களை ஜூன் 26,2023க்குள் வாங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் விளையாட்டு ஆடை உற்பத்தியாளர்கள், மதுபான பொருட்கள், கிரிப்டோ கரன்சி, பந்தயம் மற்றும் பண விளையாட்டு, புகையிலை சார்ந்த பொருட்கள் மற்றும் பொது ஒழுக்கத்தை புண்படுத்தும் வகையிலான ஸ்பான்சர்களுக்கு ஏலத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.