NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 2023-24க்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் வெளியானது: ஜடேஜாவுக்கு ஜாக்பாட்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    2023-24க்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் வெளியானது: ஜடேஜாவுக்கு ஜாக்பாட்!
    2023-24க்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் ஜடேஜா எலைட் ஏ பிரிவுக்கு மாற்றம்

    2023-24க்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் வெளியானது: ஜடேஜாவுக்கு ஜாக்பாட்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 27, 2023
    11:25 am

    செய்தி முன்னோட்டம்

    பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) 2023-24 சீசனுக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான வருடாந்திர வீரர் ஒப்பந்தங்களை அறிவித்தது.

    பிசிசிஐயின் ஒப்பந்தப் பட்டியலில் நான்கு பிரிவுகள் உள்ளன. ஏ+ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ.7 கோடியும், ஏ பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி பிரிவு வீரர்களுக்கு ரூ.3 கோடியும், சி பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடியும் வருடாந்திர ஊதியமாக வழங்கப்படுகிறது.

    இதில் ரவீந்திர ஜடேஜா, ஏ பிரிவிலிருந்து ஏ+ பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

    இதே போல் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சி பிரிவிலிருந்து முறையே ஏ மற்றும் பி பிரிவுக்கு முன்னேறியுள்ளனர்.

    இதேபோல் ஷுப்மான் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சி'யில் இருந்து பி கிரேடுக்கு முன்னேறியுள்ளனர்.

    ரவீந்திர ஜடேஜா

    வருடாந்திர வீரர் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள்

    ஏ+: ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா.

    ஏ: ஹர்திக் பாண்டியா, ஆர் அஸ்வின், முகமது ஷமி, ரிஷப் பந்த், அக்சர் படேல்.

    பி: சேதேஷ்வர் புஜாரா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில்.

    சி: உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பாரத்.

    புவனேஷ்வர் குமார், அஜிங்க்யா ரஹானே, இஷாந்த் சர்மா, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், விருத்திமான் சாஹா மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    பிசிசிஐ

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கிரிக்கெட்

    "அச்சுறுத்தலை தாண்டி தான் இந்தியா வந்தோம்" : ஆசிய கோப்பை சர்ச்சைக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய ஷாஹித் அப்ரிடி விளையாட்டு
    ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் : புதிய மைல்கல் சாதனையை எட்டும் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்
    இதே நாளில் அன்று : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர் முதல் சதம் விளாசிய தினம் விளையாட்டு
    INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : சேப்பாக்கம் மைதானம் இந்தியாவுக்கு சாதகமா? ஒருநாள் கிரிக்கெட்

    பிசிசிஐ

    படுமோசமான பிட்ச்! லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்! டி20 கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025