NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை!
    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்

    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 31, 2023
    10:21 am

    செய்தி முன்னோட்டம்

    செவ்வாய்கிழமை (மே30) ஹரித்வாருக்கு வந்த மல்யுத்த வீரர்கள் பாரதிய கிசான் யூனியன் மற்றும் விவசாயத் தலைவரான நரேஷ் திகைத்தின் தலையீட்டிற்குப் பிறகு, தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீசாமல் திரும்பினர்.

    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை ஆற்றில் விடுவதற்காக ஹரித்வாரை அடைந்த நிலையில் திகைத் அவர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு 5 நாள் கெடு விதித்தார்.

    மத்திய அரசு ஒருவரைக் காப்பாற்றுகிறது என்று பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் குறிப்பிட்டு, புதன்கிழமை இது தொடர்பாக விவாதிக்க காப் பஞ்சாயத்து கூட்டம் நடைபெறும் என்று திகைத் கூறினார்.

    முன்னதாக, மல்யுத்த வீரர்கள் மே 28 அன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தபோது போராட்ட தளத்தில் இருந்து அகற்றப்பட்டனர்.

    united word wrestling warns wfi

    உலக மல்யுத்த சங்கம் கண்டிப்பு

    டெல்லியில் நடக்கும் களேபரங்களுக்கு மத்தியில் உலக மல்யுத்த சங்கம் செவ்வாயன்று ஜந்தர் மந்தரில் இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரர்கள் தடுத்து வைக்கப்பட்டதைக் கண்டித்து, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தேர்தலை நடத்தத் தவறினால் இந்திய மல்யுத்த சம்மேளனத்த்தை இடைநீக்கம் செய்வதாக எச்சரித்துள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக சம்யுக்த கிசான் மோர்ச்சா எனும் விவசாய கூட்டமைப்பும் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மல்யுத்தம்
    இந்தியா
    மத்திய அரசு
    டெல்லி

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    மல்யுத்தம்

    'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி! மல்யுத்த போட்டி
    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! டெல்லி
    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! இந்தியா

    இந்தியா

    ஆட்டோவில் ஏற மறுத்தவர் மீது ஆட்டோவை விட்டு ஏற்றிய ஆட்டோ ஓட்டுநர்  பெங்களூர்
    ரயில் டிக்கெட் வாங்க வேண்டுமா? RAC பிரிவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  ரயில்கள்
    பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்! உலக கோப்பை
    புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ  நாடாளுமன்றம்

    மத்திய அரசு

    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது இந்தியா
    வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைப்பு!  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு இந்தியா

    டெல்லி

    தமிழ் புத்தாண்டு 2023: டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் பண்டிகை
     டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை  இந்தியா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  இந்தியா
    இந்தியாவில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் - மாத வாடகை 42 லட்சமா? ஆப்பிள் நிறுவனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025