NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இளம் வயதில் ஸ்மார்ட்போன் பயன்பாடு.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இளம் வயதில் ஸ்மார்ட்போன் பயன்பாடு.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை!
    இளம் வயதில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள்

    இளம் வயதில் ஸ்மார்ட்போன் பயன்பாடு.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 20, 2023
    04:08 pm

    செய்தி முன்னோட்டம்

    குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்றைய நிலையில் மிகவும் அதிகரித்திருக்கிறது. பெற்றோர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளிடமும் ஊடுருவியிருக்கிறது.

    குழந்தைகள் அதிகம் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனப் பலரும் கூறிவரும் நிலையில், லிங்க்டுஇன் தளத்தில் இது குறித்த பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார் ஷாவ்மி இந்தியாவின் முன்னாள் சிஇஓ-வான மனு குமார் ஜெயின்.

    அந்தப் பதிவில் குழந்தைகள் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசியிருக்கும் அவர், அது குறித்த செபியன் லேப்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றையும் சேர்த்திருக்கிறார்.

    செபியன் லேப்ஸ் நிறுவனத்தின் அறிக்கையானது இளம் வயதில் மின்னணு சாதனப் பயன்பாட்டால் என்ன விதமான விளைவுகள் ஏற்படும் என்பதை முன்னிலைப்படுத்துவதாக குறிப்பிட்டிருக்கும் அவர், அது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

    ஸ்மார்ட்போன்

    இளம் வயதில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட் பயன்பாடு: 

    இளம் வயதில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு வளர்ந்த பின்பு மன நோய் பிரச்சினைகள் ஏற்படுவதாக செபியன் லேப்ஸின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

    10 வயதிற்குள் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்திய பெண்களில் 60-70% பேர் வளர்ந்த பின்பு மன நோய் பிரச்சினைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

    அதே போல், 10 வயதிற்குள் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்திய ஆண்களில் 45-50% பேருக்கு வளர்ந்த பின்பு மன நோய் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன.

    ஸ்மார்ட்போனுக்கு ஈடாக பெற்றோர்களே தங்களுடைய குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார் அவர்.

    மேலும், ஸ்மார்ட்போன்களுக்கு தான் எதிரியல்ல எனக் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கும் அவர், அதனை அனைவரும் பாதுகாப்பான வகையில் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்மார்ட்போன்
    கேட்ஜட்ஸ்

    சமீபத்திய

    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா

    ஸ்மார்ட்போன்

    ஏப்ரல் 25-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    வீடியோ பார்க்கையில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பரிதாப பலி!  கேரளா
    ஏப்ரல் 26-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    இந்தியாவில் தங்களது ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது விவோ!  புதிய மொபைல் போன்

    கேட்ஜட்ஸ்

    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்!  சாம்சங்
    இந்தியாவில் ஆப்பிளின் திட்டம் என்ன?  ஆப்பிள்
    புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.. என்னென்ன வசதிகள்?  சியோமி
    ஒன்பிளஸ் பேடின் விலை என்ன.. அறிவித்தது ஒன்பிள்ஸ்!  தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025