NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ?
    ஜூலை 14 நண்பகல் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது சந்திராயன்-3

    ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 12, 2023
    09:25 am

    செய்தி முன்னோட்டம்

    இதுவரை சந்திரனிற்கு பல நாடுகள் பல்வேறு திட்டங்களின் கீழ் விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. ஆனால், அவை எதுவுமே இதுவரை அதன் தென்துருவப் பகுதியை அடைந்ததில்லை. அனைத்து திட்டங்களுமே பூமியைப் பார்த்திருக்கும் நிலவின் பக்கத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.

    இந்நிலையில், வரும் ஜூலை 14-ல் செலுத்தப்படவிருக்கும் சந்திராயன் -3 தான் முதன் முதலில் நிலவின் தென்துருவப் பகுதியை அடையவிருக்கும் கலமாக இருக்கப் போகிறது.

    நிலவின் பூமத்திய ரேகைக்கு அருகே, அதாவது கிட்டத்தட்ட பூமியைப் பார்த்திருக்கும் பக்கத்தில், விண்கலங்களையோ அல்லது லேண்டர்களயோ தரையிறக்குவது, அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வது தென்துருவப் பகுதியில் மேற்கொள்வதை விட சற்று எளிதானது.

    ஏனெனில், பூமத்திய ரேகைக்கு அருகே நிலவின் மேற்பரப்பும், வெப்பநிலையும் நாம் பரிசோதனை செய்வதற்கு ஏதுவான நிலையைக் கொண்டிருக்கின்றன.

    சந்திரன்

    நிலவின் தென்துருவப் பகுதிகள் எப்படி இருக்கும்? 

    நிலவின் தென்துருவப் பகுதியானது மிகவும் கரடுமுரடான பகுதியாக இருக்கும் என்பதை இதுவரை நிலவை சுற்றி வந்த ஆர்பிட்டர்கள் மூலம் கண்டறிந்திருக்கின்றனர். மேலும், சூரிய வெளிச்சமே படாத தென்துருவப் பகுதிகள் எப்போதும் இருளடர்ந்தே இருக்கும்.

    அதோடு சூரிய வெளிச்சமே படாத காரணத்தினால், அங்கு நிலவின் வெப்பநிலை -230 டிகிரி செல்சியசுக்கும் கீழேயே இருக்குமாம். இதனால் அறிவியல் உபகரணங்களை அந்த சூழ்நிலையில் இயக்குவது மிகவும் கடினம்.

    தென்துருவப் பகுதியில் சமதளத்தை விட பள்ளத்தாக்குகளே அதிகம் இருக்கும். சில மீட்டர்கள் தொடங்கி பல ஆயிரம் கிலோமீட்டர் அளவுடைய பள்ளத்தாக்குகள் நிறைந்திருக்கின்றன.

    ஆனால், இன்னும் அந்தப் பகுதி குறித்து பெரிதாக நாம் எதையும் அறிந்து கொள்ளவில்லை. எனவே தான் இம்முறை தென்துருவப் பகுதியை ஆராய்வதற்கான திட்டத்தை வடிவமைத்திருக்கிறது இஸ்ரோ.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரன்
    விண்வெளி
    இஸ்ரோ
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சந்திரன்

    நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்! விண்வெளி
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? பூமி
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி

    விண்வெளி

    வெடித்து சிதறியது எலான் மஸ்க்கின் முதல் சோதனை ராக்கெட்!  எலான் மஸ்க்
    தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை! உலகம்
    விண்ணில் செலுத்தப்பட்டு 33-வது ஆண்டைக் கொண்டாடும் ஹபுள் தொலைநோக்கி!  நாசா
    பூமிக்கு நெருங்கும் ஆபத்து: மெகா சைஸ் விண்கல் 62 ,723 கீ.மி வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது நாசா

    இஸ்ரோ

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இந்தியா
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது இந்தியா
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை தொழில்நுட்பம்

    இந்தியா

    'NEET' -ஐ தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த தேர்வு 'NExT'- இந்தாண்டு முதல் அமல் நீட் தேர்வு
    ஜுலை 14 விண்ணில் பாய்கிறது சந்திராயன் 3:இஸ்ரோ இஸ்ரோ
    இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-2 வணிகம்
    உலகளவில் 21ம் நூற்றாண்டில் விடுதலை பெற்ற இளம் நாடுகள்  இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025