NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்! 
    AI மூலம் மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காணும் வசதியை அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர்

    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 18, 2023
    12:33 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆன்லைன் மோசடி செய்பவர்கள் பிரதானமாகத் தேர்தெடுக்கும் ஒரு வழி குறுஞ்செய்திகள் தான். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்று மிக அதிக அளவில் இருக்கிறது.

    ஒரு மோசடி குறுஞ்செய்தியை லட்சம் பலருக்கு அனுப்புவதன் மூலம் சில ஆயிரம் பேராவது மோசடி செய்வர்களின் வலையில் சிக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    ட்ரூகாலர் செயலியைப் பயன்படுத்தும் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களில் குறைந்தபட்சம் ஒரு மோசடி குறுஞ்செய்தியாவது அனுப்பப்பட்டிருக்கிறது.

    வேலைவாய்ப்பு, வங்கித் தகவல், கடன், லாட்டரி என பல அவதாரங்களில் மோசடி குறுஞ்செய்திகள் பயனர்களின் மொபைல்போனை வந்தடைகின்றன.

    இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள AI தொழில்நுட்பத்துடன் கூடிய மோசடி தடுப்பு வசதியை தங்கள் செயலியில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ட்ரூகாலர் நிறுவனம்.

    ஆன்லைன் மோசடி

    எப்படி செயல்படுகிறது இந்த வசதி? 

    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காணமுடியாதவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

    பயனர்களுக்கு குறுஞ்செய்தி வரும் போதே, அதனை அடையாளம் கானும் அந்நிறுவனத்தின் AI தொழில்நுட்பம். அது மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காணும் பட்சத்தில், 'இது மோசடி செய்வதற்காக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி. இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என எச்சரிக்கை செய்யும்.

    மேலும், அந்தக் குறுஞ்செய்தியில் லிங்க்குகள் ஏதாவது அனுப்பப்பட்டிருந்தால், அந்த லிங்க்குகளையும் பயன்படுத்த முடியாத வகையில் செயலிழக்கச் செய்யும்.

    ஒருவேளை அது மோசடியாக இல்லாமல், நமக்கு தெரிந்தவர்கள் அனுப்பிய குறுஞ்செய்தி தான் எனில், மேனுவலாக அதனை பாதுகாப்பான தொடர்பு தான் என மார்க் செய்து விட்டு அதில் இருக்கும் லிங்க்குகளை நம்மால் பயன்படுத்தமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    ஆன்லைன் மோசடி
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ஜம்மு காஷ்மீர்
    'சக்தி' புயல்: அந்தமான் கடலில் சூறாவளி சுழற்சி நிலவுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை
    இணையத்தில் உலவும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் இளம் தலைமுறையை உளவியல் ரீதியாக பாதிக்கின்றன: ஆய்வு இந்தியா
    CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சிபிஎஸ்இ

    செயற்கை நுண்ணறிவு

    AI எதிர்காலத்தை மாற்றும்! IBM CEO அரவிந்த் கிருஷ்ணா சாட்ஜிபிடி
    11 ஆயிரம் ஃபாலோவர்ஸ்-களை கொண்ட ஆதித்யா ஐயர்! யார் இவர்? இந்தியா
    AI-யை குறித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பில் கேட்ஸ்! தொழில்நுட்பம்
    Bing சாட்போட்டை இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பயன்படுத்த முடியும்! தொழில்நுட்பம்

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்

    தொழில்நுட்பம்

    விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா நிறுவனம் - ஆடிப்போன மற்ற நிறுவனங்கள்  டாடா மோட்டார்ஸ்
    அட்டகாசமான சலுகையுடன் ஒன்பிளஸ் பேட் முன்பதிவு தொடக்கம்!  தொழில்நுட்பம்
    புதிய வசதியினை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்! வாட்ஸ்அப்
    குறைபாடுகளைக் கண்டறிபவர்களுக்கு 20,000 டாலர் சன்மானம், OpenAI நிறுவனம் அறிவிப்பு!  சாட்ஜிபிடி

    தொழில்நுட்பம்

    ஏப்ரல் 12-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    AI தொழில்நுட்பங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த சீனா!  சீனா
    இந்த தேதி முதல் 'ப்ளூ டிக்' நீக்கப்படும்.. எலான் மஸ்க் ட்வீட்!  எலான் மஸ்க்
    சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்  தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025