தீபாவளி பற்றி அதிகம் தேடப்பட்ட 5 கேள்விகள்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வெளியீடு
இந்தியாவின் அதிகம் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளியின் கொண்டாட்டங்கள் ஓய்ந்து விட்டது. இந்த நிலையில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) கூகுள் தேடலில், தீபாவளி பற்றி அதிகம் தேடப்பட்ட கேள்விகள் என்ன என்பதை பட்டியலிட்டுள்ளார். தனது பதிவில் முதலில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த சுந்தர் பிச்சை, 'இந்தியர்கள் ஏன் தீபாவளி கொண்டாடுகிறார்கள்?' அதைத் தொடர்ந்து, 'தீபாவளி அன்று வாசலில் ஏன் ரங்கோலி போடப்படுகிறது', 'தீபாவளி அன்று ஏன் விளக்கு ஏற்றுகிறோம்', 'தீபாவளி அன்று லக்ஷ்மி பூஜை ஏன் செய்யப்படுகிறது,' மற்றும் 'தீபாவளி அன்று எண்ணெய் குளியல் ஏன்' போன்ற கேள்விகளே கூகிளில் அதிகம் தேடப்பட்டதாக கூறியுள்ளார்.